Monday 30 July 2012

...ஏட்டுச்சுரைக்காய்...
நீங்கள்
பெரியார் பாசறையில்
பயின்றதனால் என்ன பலன்?

கார்ல் மார்க்ஸை
கரைத்து குடித்ததனால்
என்ன பயன்?

அண்ணல் அம்பேத்கரை
அறிந்திருந்து என்ன நலன்?

சே குவேரா சரித்திரத்தை
சேகரித்து வைத்து;
நீங்கள் செய்தது தான் என்ன?

சாதிய!
முதலாளித்துவ!!
சர்வாதிகார!!!
சிந்தனை கொண்ட - உங்கள்
மேதாவி மூளையை;
கொண்டுபோய்
குப்பையில் போடுங்கள்...

தேவைக்குதவாத
தற்பற்றார்ந்த ஞானம்
தீப்பற்றி எரியட்டும்...

-பத்மா சுவாமிநாதன்

No comments:

Post a Comment