Monday 30 July 2012

...காட்சிப்பொருட்கள்... 

தமிழரைத்
தமிழனே
ஆள வேண்டுமென்போர்;
திருமாவை தலைவனாக
ஏற்றுகொள்ளப்போவதும் இல்லை!

திராவிடம் பேசும்
வீரத் திலகங்கள் - ஒருபோதும்
வைகோவிற்கு வாய்ப்புதரப்
போவதும் இல்லை!!

அவரர் அரசியல்
ஆதாயத்திற்காக
அவ்வபோது வரும்
தமிழர் நல முழக்கங்கள்;
அறுபது ஆண்டுகளாய்
அள்ளிவீசப்படுவதும்...

ஆட்சிக்கு வந்தபின்
அவைகள்
கிள்ளிவீசப்படுவதும்
நமக்குத் தெரியாதா என்ன?

மக்கள் நலனில்
அக்கறையிருந்தால்?
ஓரணியில் வந்து நில்லுங்கள்
உங்கள் பின்னே உலகம் நிற்கும்...

அதைவிடுத்து
பெரியாரை கன்னடன் எனும்
உங்கள் அரசியல் முழக்கங்களும்...

இல்லாத ஒன்றை
இருட்டில் தேடுகிற
உங்கள் திராவிடமும்...

வேடிக்கை
பார்க்கப்படுமேயன்றி
வேலைக்காகாது!
- பத்மா சுவாமிநாதன்

No comments:

Post a Comment