Monday 30 July 2012

...மற்றவை வழக்கம்போல்...

பிறரைப் போலவே
பிறந்தோம்...
வரையறுக்கப்பட்ட
வாழ்க்கை முறைப்படி
வளர்ந்தோம்...

வெற்றியென்ற - ஒற்றை
இலக்குநோக்கி
வெறித்தனமாய்
ஓடுகிறோம்...

பூங்குயில் ஓசையும்
பூவையர் வாஞ்சையும்
போகிற வழிதனில் - சற்றே
இளைப்பாற்ற...

மீண்டும்
ஓட்டமெடுக்கும்
இந்த நாய்பிழைப்பின்
நோக்கமென்ன;
பொதுநலன் சார்ந்தா
இருக்கப்போகிறது?

இனியொரு முறை
எப்படி இருக்கிறாயென
யாரும் கேட்டுவிடாதீர்!

சகமனிதர்கள் சாகும்போதும்
சுயநலமாய் சிந்தித்த - இந்த
சாமானியன் வாழ்வில்
சாதனைகளா நிகழ்ந்துவிடும்?

மற்றவை
என்றுமே;
வழக்கம் போல்...

உண்போம்
உடுத்துவோம்
உறங்குவோம்
மறவாமல்;
இனவிருத்தி செய்வோம்
அவ்வளவே...
- பத்மா சுவாமிநாதன்

No comments:

Post a Comment