Monday 30 July 2012

...அப்பாக்கள் மாறுவதேயில்லை!...

எனக்கு
விளக்கம் தருகிற - உந்தன்
தோனியில் மட்டுமே
மாற்றமிருப்பதாய் உணர்கிறேன்...

"இப்ப உனக்கு இது புரியாதுப்பா"
எனும்போதே புரிகிறது;
உன் பிள்ளைமீதான
இச்சமூகத்தின் பார்வை
எப்படியிருக்கவேண்டுமென
நீ பிரயத்தனப்படுவது!!

இன்னும் என்னவெல்லாம்
இருக்கிறதோ உன்னிடம் கற்றுக்கொள்ள!

மறக்காமல் அனைத்தையும்
சொல்லிக் கொடுத்துவிட்டுப் போ...
உன் பேரனை
உன்னைப்போலவே
வளர்க்கப் பயன்படட்டும்!!
- பத்மா சுவாமிநாதன்

No comments:

Post a Comment