Monday 30 July 2012

துரோகிகள் சூழ் தரணி...

எத்தனை தலைமுறைகள்
எதிர்த்து நின்று போராடினாலும்
வெற்றி உனக்கு;
எட்டாக்கனியே!

உங்கள் குறிக்கோள்
உயரிய நோக்குடையதாக
இருக்கலாம்...

உயிரைத் துறக்க
ஓராயிரம் பேர்
ஒன்றுபட்டு நிற்கலாம்...

உங்களோடு - ஓர்
நயவஞ்சகன் இருப்பானேயானால்
கழுத்தறுக்கப்படுவது உறுதி...

கொள்கைகளை விற்று
கட்சி நடத்தும்
ஒருவனிடத்தில்;
நீங்கள் கொண்ட நம்பிக்கை!
அவனுக்கே வியப்பாக
இருந்திருக்கும்...

தனி ஈழம் கோரினால்?
கணிவாழ்வது சிறையிலென்று!
செட்டிநாட்டார் சொல்கையில்
மறுக்கவா முடியும்?

பாவம் விட்டுவிடுங்கள் - அந்த
கிழப்பாம்பையும்;
அது கக்கி வைத்திருக்கும்
டெசோவையும்...

இனியாவது
போர்களத்துள்
பாம்புகள் வராது
பார்த்துக்கொள்வோம்!

- பத்மா சுவாமிநாதன்

No comments:

Post a Comment