Monday 30 July 2012

...மறுக்கப்பட்ட நீதி...

இரக்கமென்ற
பொருளற்றவன்...

இங்கே
இராமனாக
வணங்கப்படுவான்!

ஈசனாக
பூஜிக்கப்படுவான்!

நாயனாராய்
நமஸ்கரிக்கப்படுவான்!

கண்ணனாகக்
கொண்டாடப்படுவான்!

ஆச்சாரியராக
அறியப்படுவான்!

முனிவராகப்
போற்றப்படுவான்!

க்ஷத்ரியனாக
சேவிக்கப்படுவான்!

தேவர்களாகத்
தொழப்படுவார்!

அதுவே
தமிழனாய் இருந்தால்?
தீர்மானமாய்
தண்டிக்கப்படுவான்!!

தவம் புரிந்த சம்புகனின்
தலையெடுத்த!
கொலையாளி இராமன்
தெய்வமானான்...

பசியாறிய குற்றத்திற்காக
பலநூறு பேரோடு;
பச்சிளங் குழந்தையை
இரண்டாய்ப் பிளந்த!
கொடூரன் கோட்புலி நாயனார்
சேக்கிழாரானான்...

தலைப்பிள்ளை கறிகேட்ட!
தறிகெட்ட சிவனடியார்
சிறுத்தொண்டரானான்...

குருதட்சணையாய்(?!)
கட்டைவிரலை கேட்ட
கேடுகெட்ட துரோணர்
ஆச்சாரியரானான்...

பெற்றெடுத்த தாயின்
தலையை கத்தரித்த!
கொடிய பரசுராமன்
க்ஷத்ரியனானான்...

அறவே இரக்கமின்றி
அரிச்சந்திரனை ஆட்டிவைத்த
வன்னெஞ்சன் விசுவாமித்திரன்
முனிவரானான்...

தர்மத்தின் பெயரால்!
இவற்றையெல்லாம்
ஞாயப்படுத்திய இவ்வுலகம்...
தமிழனுக்கு மட்டுமே(?)
தண்டனை தந்ததில்
ஆசுவாசம் அடைந்துகொள்கிறது!

வீரன்,
தவசி,
கலைஞன்,
தமிழன் இராவணன் - இறுதியில்
தமிழரிடமே அரக்கனானான்!!

நீதி
முக்காலமும் - எமக்கு
மறுக்கப்படுவது
எங்கனம் ஞாயம்?

ஆரியத்தின்
அ(த்)தர்மத்தை - சற்று
தள்ளியே வையுங்கள்...
- பத்மா சுவாமிநாதன்

No comments:

Post a Comment