Monday 30 July 2012

...நீயும் நானும்...

புலிகளுக்காக
காப்புக்காடுகள் அமைத்து
பராமரிக்கும் - இதே
நாட்டில்தான்!

தற்கொலை
செய்துகொள்ளும்
விவசாயி...

பள்ளிசெல்லும் வயதில்
பாத்திரம் கழுவும்
சிறார்கள்...

கூட்டு
பலாத்காரத்திற்கு
பலியாகும் பெண்...

கள்ளக் காதலிக்காக
மனைவியைக் கொல்லும்
கணவன்...

ஓட்டுப்போட்டவனை
ஓட்டாண்டியாக்கும்
அரசியல்வாதி...

குடிமகனின்
குறைகேட்காத
அரசு...

எது நடந்தால்;
எனக்கென்ன எனும்
நீ, நான்...

- பத்மா சுவாமிநாதன்

No comments:

Post a Comment