Monday 30 July 2012


...போடா போடா புண்ணாக்கு...
 
அப்பாவித் தமிழர்கள்
அழித்தொழிக்கப்பட்டபோது
அமைதிகாத்து நின்ற
அடிவருடிகள்...

அன்றாடம் மீனவர்கள்
சுட்டுக்கொல்லப்பட்டபோது
கூட்டணி தர்மம்
காத்த கயவர்கள்...

இனப்படுகொலைக்கும்
இனவெறிக்கும் எதிராக
பேசுவதே பெருங்குற்றமென்றும்;
மீறுவோர் மீது
தேசிய பாதுகாப்பு
சட்டத்தைப் பாயவிட்ட
பயங்கரவாதிகள்...

நிர்பந்திக்க வேண்டிய
நேரத்திலெல்லாம்;
இராஜபக்செவுக்கும்
சோனியாகாந்திக்கும்
வாலாட்டி நின்ற நீங்கள்!
இன்று
நடத்தும் போராட்டம்
பொதுநல நோக்கம் கொண்டதென்று
சொல்வது தான் - இந்த
நூற்றாண்டின் மிகச்சிறந்த நகைச்சுவை!!

கட்சிக்காரர்கள்
கைது செய்யப்படுவதைக்
கண்டிக்கவேண்டுமேன்பதே - உங்கள்
போராட்டத்தின் பிரதான நோக்கமென்பதை
இவ்வுலகம் நன்கு அறியும்...

மண்டபத்தில்
முழு ஆந்திரா சாப்பாடு
தருகிறார்களாம்!
மூக்குபிடிக்க சாப்பிட்டு வந்து
முழங்குங்கள் - உங்கள்
தொலைகாட்சியில்!!

No comments:

Post a Comment