Monday 30 July 2012

மாற்றமிலா மாற்றம்..

விழுப்புரத்தில்
பழங்குடியினப் பெண்கள்;
பெரியகுளம் வசந்தி - என்று
காக்கிகளால் மானபங்கம்
செய்யப்படும் ஏழைகள்...

பரமக்குடி,
நாங்குநேரியென
தொடரும் என்கௌன்ட்டர்
படுகொலைகள்...

இவற்றையெல்லாம்
பற்றி எள்ளளவும்
கவலையின்றி எப்படித்தான்
காற்றுவாங்க முடிகிறதோ - உங்கள்
புரட்சித்தலைவியால்?

பலாத்காரம் செய்வோருக்கு
பணியிடை நீக்கமும்!
படுகொலை செய்வோருக்கு
பெயருக்கு ஒரு விசாரனையும்!
பாதிக்கப்பட்டோருக்கு
பலனளிக்குமா?

போலீசாரை எதிர்த்து!
இம்மக்களின் போராட்டம்
வெற்றிபெறுவதை விட;
இவர்களை வாழவிடுவார்களா
என்பதே என் கேள்வி?

அழுகின்ற குழந்தையை
அரவணைப்பவளே!
"அம்மா" எனப்படுபவள்...

அழுகை தானாய்
அடங்கும்வரை
அந்நியமாய்
நிற்பவளல்ல!!

ஆட்சியும்
அதிகாரமுமே - உங்கள்
குறிக்கோளாக இருப்பின்!

தேர்தலும்
வாக்குகளுமே - எங்கள்
பதிலாக இருக்கும்!!
- பத்மா சுவாமிநாதன்

No comments:

Post a Comment