Friday 6 November 2009
























ஆரிய் மாயை...

பேராசைப் பெருந்தகையே போற்றி !
பேச நா இரண்டுடையாய் போற்றி !
பயங்கொள்ளி பரமா போற்றி !
படுமோசம் புரிவாய் போற்றி !
சிண்டு முடிந்திடுவாய் போற்றி !
சிரித்திடும் நரியே போற்றி !
-அறிஞர் அண்ணா

Saturday 5 September 2009

யாரை கேட்பது? ஞாயம்...




















நல்ல
மனிதர்களை கடவுள் பூமியில் விட்டுவைப்பதில்லை...
தன்னுடன் வைத்துக்கொள்வர் என்று யாரோ சொல்ல கேட்டிருக்கிறேன்...
ஆம் உண்மைதான் அவன் கடவுளோ அல்லது
இயற்கையோ...
கொண்டு சென்றான் (மன்னிக்கவும்) கொன்று சென்றான்...
திரு.ராஜசேகர ரெட்டியை - சின்னா பின்னமாக.
ஏன் இத்தனை கொடுரம் அந்த மாமனிதனுக்கு, உண்மையான செவைக்கா?
அல்லது உயர்ந்த உள்ளதிற்க்கா? அல்லது ஓங்கி வளர்ந்த புகழுக்கா?
யாரை கேட்பது...
- சுவாமிநாதன்

Saturday 2 May 2009

லிட்டில் மாஸ்டர்...

சச்சின் டெண்டுல்கர் மும்பை மாநகரத்தைச் சேர்ந்த ஒரு நடுத்தரக் குடும்பத்தில் நான்காவது குழந்தையாகப் பிறந்தார். பல கிரிக்கெட் வீரர்களை உருவாக்கிய சாரதாஷ்ரம் வித்யாமந்திர் பள்ளியில் சேர்ந்தார். மும்பையின் பள்ளிகளுக்கிடையிலான போட்டி ஒன்றில், இப்பள்ளியின் சார்பாக விளையாடிய இவரும் வினோத் காம்ப்ளியும் இணைந்து 664 ரன்கள் குவித்து சாதனை புரிந்தனர். பின்னர் 1988/89இல் மும்பை சார்பாக விளையாடிய இவர் 100 ரன்கள் குவித்தார். இது இவர் ஆடிய முதல் மாநிலங்களுக்கிடையிலான போட்டி என்பதும், அப்போது அவர் வயது 15 என்பதும் குறிப்பிடத்தக்கது.
டெண்டுல்கர் 1989ஆம் ஆண்டு தம் 16வது வயதில் முதன் முறையாக இந்தியாவின் சார்பாக
டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் அவரால் ஒரே ஒரு அரைச்சதம் மட்டுமே அடிக்க முடிந்தது. 1990ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக தனது முதல் சதத்தை அடித்தார். அது முதல் இந்திய அணியில் நிலையாக தொடர்ந்து ஆடி வரும் இவர், டெஸ்ட் போட்டிகளில் 12,000 ரன்களுக்கு மேல் குவித்த வீரராவார்.

முன்டாசுப்புலவன்


தேடி சோறு நிதம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்
வாடி துன்பமிக உழன்று - பிறர்
வாட பல செயல்கள் செய்து
நறை கூடி கிழப் பருவம் எய்தி
கொடுங்கூற்றுக்கு இரையென பின் - மாயும்
பல வேடிக்கை மனிதரை போல் நான்
வீழ்வேன் என்று நினைத்தாயோ !!!
இனி என்னை புதிய உயிராக்கி
மதிதன்னை மிகத்தெளிவு செய்து - என்றும்
சந்தோசம் கொண்டிருக்கச்செய்வாய்...
- சுப்ரமணிய பாரதி.