Monday 30 July 2012

...கரை திரும்பாக் கட்டுமரம்...

வழக்கமானதொரு
இரவென்றே - அன்று
வேலைக்கு புறப்பட்டான்
குமரன்...

வழியனுப்ப
வாசல்வரை
வந்தவளை - அவன்
திரும்பிப் பார்க்கவில்லை!

இடையூறு எத்தனை
இருப்பினும்;
இடிபாடுகளோடே இயங்கும்
இயந்திர வாழ்க்கை அவனுக்கும்...

கிளம்பும்போது
குறித்துக்கொண்டான்
கற்பமுற்றிருக்கும் கயல்விழிக்கு
குங்குமப்பூ வாங்கித்தர...

ஆழ்கடல் சென்றபின்னும்
ஆழ்மனதில்
அவள் நினைவு!

கட்டுமரக்காரனுக்கு
காதலொரு கேடா? - என
ஒட்டுமொத்த உலகமும்
ஒன்றுகூடி கேட்டது முதல்...

தடைகளைத் தாண்டி
திருமணம் முடித்து;
தனிக்குடித்தன
ததிங்கினதோம் வரை...

மாம்பழம் துளைதிடும்
வண்டாய் - நினைவுகள்
மூளையை துளைத்தபோது;

சற்றும்
எதிபார்க்கவில்லை
எதிரி எய்திய குண்டு - அவன்
இதயத்தை துளைக்குமென்று!

No comments:

Post a Comment