Wednesday 29 December 2010

அண்ணன் அழைக்கிறார்... அலைகடலென திரள்வீர்...

முகநூல் நண்பர்களே...
முகம் தெரியா தோழர்களே...
நட்பை ஏற்றுக்கொண்ட நல்லோர்களே...
அழைப்பு தந்த அன்பர்களே...
விருப்பங்கள் தந்த வள்ளல்களே...
கருத்து கொடுத்த கனவான்களே...
கலாய்த்த கண்மணிகளே...
பெரியோர்களே...
தாய்மார்களே...
அண்ணன்மார்களே...
அக்காமார்களே...
தாத்தாமார்களே...
பாட்டிமார்களே...
உங்கள் அனைவருக்கும் ஒரு நற்ச்செய்தி...
ஆன்மீக பனி நிமித்தமாக
அடியேன் புறப்பட இருக்கிறேன்...
மீண்டும் உங்களை சந்திக்கும் வரையில்...
மீளமுடியா துயர்கொன்டாலும்...
மலையாளக் கரை போய் வந்தாலும்...
மூன்றாம் தேதி நான் வருவேன்...
முகநூல் துணைகொண்டு கிறுக்கிடுவேன்...
தொல்லை ஒழிந்தது என்றுங்கள்
உள்ளம் சொல்வது...
தொலைதூரத்தில் இருந்தாலும்
உறக்க கேட்குது...
"அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று வாழ...
எல்லாம் வல்ல இயற்கையை / இறைவனை
வேண்டுகிறேன்..."
இத்துடன் என் உறையை முடித்துக்கொண்டு...
வாய்பளித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி கூறி...
ஏ யாருப்பா பின்னாடி தள்ளுறது?
பேசிக்கிட்டு இருக்கோம்ல?
ஏ வேட்டிய எவன்டா உருவுறது?
ஏ இந்தாடா வேட்டிய உடுறா?

1 comment: