Monday 20 December 2010

படைத்தவனை தூக்கிலிடு...


பருக்கள் முளைத்தபோதே;
பாவி நெஞ்சுக்குள்ளே...
காமமும் முளைத்துவிட...
தன் இச்சை முழுதாய் தீர்க்கும்
தணவானை தேடியவள்
தனக்கென ஒருவனை தயங்கி தேர்வுசெய்ய...
பார்வையிலே பேசிய காதல்
போர்வைக்குள்ளே போய் முடிய...
உப்பு நீர் வார்த்த தேகம்
சப்பு கொட்டி சுவைக்கத்தோன்ற...
நரம்பெல்லாம் சூடாகி - நேரம் காலம்
இவைமறந்து தேகப்பசி கண்மறைக்க...
காமுகன் உமிழ்ந்த எச்சில் - அவள்
கற்பு கறைபடிய...
தன் காம வெறிதீர்த்த;
காதலனை முத்தமிட...
தொட்டவுடன் சிலிர்த்த தேகம்
கெட்டபின்பு கசகசக்க...
காமமும் ஓய்ந்தது - அவளின்
காதலும் தேய்ந்தது...
புணர்ச்சியின் பலனாய் - பிறந்த
பாலகனை ஏன் அவள் கொன்றாள்?
பெண்ணவளை பூமி என்றோம்...
கடவுளென்றோம்...
அவளுக்கும் பசி உண்டு...
ருசி உண்டு...
காதல் உண்டு...
காமம் உண்டு...
பிறகெப்படி கடவுளாவாள்?
ஆணுக்குள்ள சுதந்திரங்கள்...
பெண்ணுக்கும் வேண்டுமென்று;
தோள்தட்டி நிற்கும் உலகே!!!
ஆற்றிலும் மேட்டிலும்...
தொப்புள்கொடி உறவுதனை;
பெற்றவளே கொல்வதுதான் சுதந்திரமா?
முறைதவறி பிறந்ததேன்றால்?
அது முந்திவிரித்துப் படுத்தவள் குற்றமா?
அல்ல கழுத்தை நேரிக்கும்போதும் அம்மாவென்றழுத
குழந்தையின் குற்றமா?
முட்டையாய் இருந்த சிசுவை...
முழங்கால் தேயத்தேய
மூக்கும் முழியுமாய் ஆக்கியவன் குற்றமென்றால்?
பிறப்புறுப்பை உள்ளே வைத்து
கருத்தரிப்பை நடத்தும்போது
கண்சொருக கிடந்ததவளே...
உன் பெயர்தான் பத்தினியோ?
உடற்பசிக்கு தீனிபோட்டால்?
உள்ளே ஒன்று வளருமென்று;
உணகன்றே தெரிந்தபோதும்!!!
உறை ஒன்றை போட்டுக்கொண்டால்?
சுகமொன்று குறையுமென்று;
ஆணுறை தவிர்த்த பெண்ணே...
நீயும் ஒரு பிறப்பா?
உனக்கு தாய்மையை கொடுத்ததற்கு;
படைத்தவனை தூக்கிலிட வேண்டுகிறேன்...

2 comments: