Wednesday 22 December 2010

ஞானோதயம்...

அதிகாலை...
அந்தி மாலை...
குளிர் காலம்...
கோடை காலம்...
இவையேது எனக்கு...
திங்களும்..
புதனும்...
திருவாதிரையும்...
பிரதோஷமும்...
தெரியாது எனக்கு...
புத்தகம்...
பள்ளிக்கூடம்...
பரிட்சை...
பாடம்...
பிடிக்காது எனக்கு...
அலுவலகம்...
அண்டைவீடு...
ஆலயம்...
ஆன்மீகம்...
அறவே ஆகாது...
அவள் குரல் கேட்டுக்கொள்ள;
அலைப்பேசி ஒன்றே போதும்.
தொடக்கம்தான் தடுமாற்றம்;
தொடங்கிவிட்டால் போதும்...
தொலைதூரம் நடந்தே செல்வேன் - அவளின்
தோடி ராகம் கேட்டுக்கொண்டு...
அலுவல்கள் மறந்து;
அவைதரும் பலன் மறந்து...
அவளே வாழ்வென்று வாழும் எனக்கு?
அப்பா சொன்னது மறந்தே போனது...
"எப்படி வேணும்னாலும் வாழலாம்
என்பது வாழ்க்கையல்ல...
இப்படித்தான் வாழவேண்டும் என
வழி அமைத்து...
திட்டம் வகுத்து...
முறையாக உழைத்து...
உன் கடமையை செய்யவேண்டும்" - என்று.
இனிமேலாவது அவர் சொன்னதை
செய்யணும்...

No comments:

Post a Comment