Friday 10 December 2010

புடவை கலாசாரம் - ஒரு பார்வை...


கெடக்குறது கெடக்கட்டும்...
கெழவன தூக்கி மனையில வை...
என்றப் பழமொழிக்கு தகுந்தாற்போல்.
ஆயிரத்தெட்டு பிரச்னை இருக்கும்போது
உனக்கு ஏன்  இந்த தேவையில்லாத வேலைன்னு;
நீங்க கேக்குறது எனக்கு புரியுது...
அதுக்கொரு காரணமும் இருக்கு.
நெருங்கிய தோழி ஒருத்தியிடம் பேசும்போது
இந்த விஷயம் தெரியவந்தது... 
இதை பற்றி பேசணும்னா
பதினஞ்சி இருவது வருஷம்
பின்னோக்கி செல்லனும் - கமல் சொல்வது போல...
ஊரில் எங்கு பார்த்தாலும்
கல்யாணம் ஆன பெண்கள் சேலையிலும்;
கன்னிப்பெண்கள் தாவணியிலும்;
ஒரு கலக்கு கலக்குவார்கள்...
கொஞ்ச நாள்ல...
செளகரியம் காரணமாக
விட்டில் நைட்டியும்
வெளியில் ச்சுடியும் மிக பிரபலம் ஆனது...
பிறகு மிடி, ஜீன்ஸ் என்று
நவ நாகரீகமாக
அடையாளம் காணப்படும்
அனைத்து ஆடைகளும் பிரசித்துபெற்றது...
ஆக கி.மு.28ம் நூற்றாண்டில்
தோற்றுவிக்கப் பட்டதாக சொல்லப்படும்
ஒரு கலாசாரம்...
சற்றே நகர்ந்து நகர்ந்து - இன்று
தொலைதூரத்தில் உள்ளதாகவே தோன்றுகிறது... 
வீட்டுல எதாவது விஷேசம் வந்தா?
வடை பாயசம் செய்யிற மாறி ஆகிபோச்சு...
இந்த சேலை கட்டும் பழக்கமும்.
இதுக்கு அவங்க சொல்லுற விளக்கத்த
நீங்களே கேளுங்க?
1.செளகரியமா இல்ல...
2.உடுத்திக்கொள்ள எளிமையா இல்ல...
3.உடுத்தவே தெரியாது...
4.என்னதான் புதுரகம் வந்தாலும்;
  ரொம்ப பழமையா இருக்கு...
5.பரிகாசம் செயிறாங்க!!!
பெரியவங்கன்னு ஒரு பேச்சுக்கு
சொன்னேனே தவிர!!!
நம்ம பொலம்பல் எல்லாம்;
பொண்ணுங்கள பத்திதான்...
இவ்வளவு காரணம் சொல்லி
பொடவைய ஒதுக்குறீங்களே...
நீங்க கடைசி பயணம் போகும்போது
உங்க மேல போத்துறது புடவையதான்!!!
ஜீன்ஸோ, டீ ஷர்டோ இல்ல...
நான்  ஏன் இவளோ ஆதங்கப் படுறேன்னு
நீங்க கேக்கலாம்?
ஒட்டு மொத்த ஆண் இனத்தின்
சார்பா கேக்குறேன்...
இந்த பயபுள்ளைங்க
பொடவையத்தான் விரும்புதுங்கன்னு!!!
உங்களுக்கு ஏன் புரியவே மாட்டேங்குது?

1 comment: