Wednesday 8 December 2010

Mujhe Faq Rahe...


காலையில எந்திருச்சு...
கடைத்தெருவுக்கு நடந்து போயி...
காபித்தண்ணி குடிச்சிபுட்டு...
கடவாயில பொகையல அடக்கி...
கோழி கூவும் நேரத்தில...
கோமனத்த இருக்கிகட்டி...
கெழக்க செவக்கும்போது...
கலப்பைய தூக்கிக்கிட்டு...
கழினியில கால்பதிச்சு...
காட்டுலயும் மேட்டுலயும்...
காலம் நேரம் பாக்காம...
குடிச்ச கஞ்சி செரிச்சு போயி...
கும்மிருட்டு வரும்வரையில்...
குடும்பத்தோட வேலை செய்யும்...
நம்ம குமரேசன்!!!
கடன்தொல்ல தாங்காம - 98ல
தூக்குல தொங்கிட்டான்...
இது எங்க ஊரு குமரேசன் கதை.
இதேமாரி
1997 முதல் - 2008 வரை மொத்தம்
1,99,132 குமரேசன்கள்  செத்திருக்காங்க...
இதெல்லாம் பத்தி கவலைப்பட இங்க ஆள் கெடயாது...
இந்த மக்களோட ரத்தத்த குடிச்சு...
பாவப்பட்ட வயித்துல அடிச்சி...
ஊழல் பண்ணி சம்பாரிச்ச - நம்ம
இந்திய அரசியல் வாதிகளும்...
சினிமா பிரமுகர்களும்; தொழிலதிபர்களும்...
திருட்டுத்தனமா சுவிஸ் பேங்க்ல போட்டிருப்பது  
இருபது லட்சம் கோடியாமே!!!
அடப்பாவிகளா...
இவ்வளவு பணம் இருக்கும்போது
ஏண்டா போயி உலகவங்கி காலில் விழுறீங்க?
வெக்கமா இல்லையா உங்களுக்கெல்லாம்?
அங்குள்ள  பணத்தை எடுத்து வந்தா?
இங்க ஏதுடா வருமைகோடு?
ஒரு நாட்டின் பொருளாதாரத்தை
நிர்ணயிக்கும் முக்கிய காரணியாம்
விவசாயத்திற்கும், விவசாயிக்குமே 
நிலைமை இதுவென்றால்...
நிச்சயமாக சொல்லமுடியும்;
அழிவின் பாதையில் அனைவரும் செல்கிறோமென்று...
எது எப்படியோ சுவிஸ் வங்கியில்
பணம் பதுக்குவதில் நாம்தான் முதலிடம்...
மார்தட்டி சொல்வேன்...
இந்தியனாய் இருப்பதில்
Mujhe Faq Rahe...

No comments:

Post a Comment