Monday 6 December 2010

கருப்பு நாள்...

மனிதனை நெறிமுறைப்படுத்தி
நற்குணங்கள் புகட்டி...
அன்பைக் கொடுத்து
அறிவைக் கொணர...
கற்பனையும், கவிநடையுமாய்
சொல்லப்பட்டதே - இந்த
இதிகாசங்கள்....
கற்பனையாய் சொன்னது - கயவர்களால்
கலவரமாய் போனது...
ஆம் இந்துக்கள் புனிதபூமியாய்
போற்றும் அயோத்தி - அதுதான் கதைக்களம்...
கதைப்படி ராமர் இங்கு வந்து பிறக்க...
ராமாயணம் பிறந்தது - இது இதிகாசம்...
கதையில் வந்தவன் கடவுளானதால்?
கலவரமானது அயோத்தி...
1527ம் ஆண்டில் கட்டப்பட்ட
பாபர் மசூதியை...
கலவரக்காரர்கள் 1992ம் ஆண்டு
தரைமட்டமாக்கினர்...
அந்த இடத்தில் ராமர்கோவில் இருந்ததாம்
அதை இடித்துதான் மசூதி கட்டப்பதாம்...
இப்படித்தான் சொன்னார்கள் - அந்த
இழிசெயலை செய்தவர்கள்...
இந்துத்துவம் பேசுவோர் 
இந்தக் கேள்விக்கு பதில் சொல்லட்டும்... 
ராமார் கோவிலை இடித்துவிட்டுத்தான்
பாபர் மசூதி கட்டப்பட்டதெனில்;
கோவிலை இடிக்கும்போது நீயென்ன 
காவியம் பாடிக்கொண்டு இருந்தாயா?
நான் சொல்லட்டுமா?
காபுலில் இருந்து கால்பதித்த - பாபரின்
கால்நகத்தை கூட நெருங்க பயமுனக்கு...
எப்போது வந்தது - உனக்கு இந்த
இந்துத்துவ சிந்தனை?
மன்னராட்சி முடிந்த பின்பா?
ஆங்கிலேய ஆட்சியிலா?
அப்போதெல்லாம் வராத
உன் பக்தியும் கடவுளும்;
கொடூர புத்தியும்!
எப்படித்தான் வந்ததோ
ஆர் எஸ் எஸ் வந்தவுடன்?
பாபர் மசூதி இடிப்பு - கடும்
கண்டனத்திற்கு உரியதே...
குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டாலும்
ஒவ்வொரு டிசெம்பர் ஆறும்
நமக்கு கருப்பு நாளே...

No comments:

Post a Comment