Thursday 16 December 2010

தலைப்பை நீங்களே சொல்லுங்க...

குடும்ப ஊடகங்கள் எதுவும்
மக்களை குழப்பாத நேரமது...
கேபிள் டிவியும், டிஷ் டிவியும்
கால்பதிக்காத காலமது...
விஸ்வரூப விளம்பரங்கள் இல்லாத வேளையது...
சந்திரிக்கா சோப்பும், நிஜாம் பாக்கும்
ஸ்பான்சர் செய்த சமையமது...
திருச்சி வானொலியும், தூர்தர்ஷனும்
தழைத்தோங்கிய தருணமது...
இலங்கை வானொலி தமிழர் இல்லமெல்லாம்
இன்பம் தந்த பொழுது அது...
பள்ளி சென்ற காலமென்பதால்
பசுமையாய் உள்ளன அத்தனையும்...
திருச்சி வானொலியில் தினந்தோறும்
வருவார் தென்கட்சி கோ.சுவாமிநாதன்...
தேநீர் அருந்திக்கொண்டே - அவர்
சொல்லும் கதையில;
எத்தணை கருத்துக்கள்? 
திரையிசை பாடல்கள் தொகுத்து வழங்க
தவறாமல் வருவார் பி.எச்.அப்துல் ஹமீது...
லீ.வீ .யின் சினிமாப்பாடல்...
இலக்கம், கரகோஷம், அன்பு அறிவிப்பாளர்
இவையெல்லாம் அவர் சொல்ல கேட்கவேண்டும்...
தென் வந்து பாய்ந்தே தீரும்...
வயலும் வாழ்வும்...
ஒலியும் ஒளியும்...
நாட்டுப்புற பாடல்கள்...
எதிரொலி என தூள் கிளப்பும் தூர்தர்ஷனில்
இரவு எட்டானால்;
இன்னொரு நிலா வரும் - செய்தி வாசிக்க...
திருமதி.ஷோபனா ரவி...
எத்தனை பக்க செய்தியாய் இருந்தாலும்
எவ்வளவு பெரிய சொல்லானாலும்
ஆங்கில பெயரானாலும்
அலட்டாமல் சொல்லி முடிப்பார்;
அழகான குரலில்...
பிறப்பால், இனத்தால், மதத்தால்
வேறுபட்டிருந்தாலும்;
என் தலைமுறைக்கு இவர்கள் ஊட்டிய
தமிழ்ப்பால் இன்றும் சுவைதரும்... 

No comments:

Post a Comment