Sunday 12 December 2010

போங்கடா... போயி பொழப்ப பாருங்க...


உயிரே...
உணர்வே...
ஊற்றே...
தமிழே...
தனலே...
கடலே...
கதிரே...
காற்றே...
ஞாயிறே ...
ஞாலமே...
ஞானமே...
ஞானியே...
வள்ளலே... 
அரசே...
தங்கமே...
சிங்கமே...
இப்படி எங்கு பார்த்தாலும் 
ஒரே போஸ்டர்கள் - சாலையின் 
இருமருங்கிலும்...
ஆளுங்கட்சியை ஆராதனை  செய்ய 
வைக்கப்பட்ட இதுபோன்ற விளம்பரங்கள்...
ஆக்கிரமித்தது சென்னை நகரம் முழுவதும்...
ஆணை பிறபித்த அரசாங்கமே - அதை
மீறியதுதான் கொடுமை...
முற்றும் அறிந்த; 
முத்தமிழ் அறிஞருக்கு...
சற்றும் சளைத்தவர்கள் நாங்களல்ல - என்று
போட்டிக்கு போஸ்டர் வைத்தது 
எதிர் கட்சி...
நாட்டுக்கு நல்லது பண்றதுக்கு
யாரும் இல்லை என்றாலும்...
அறிக்கை விடவும்...
இப்படி அராஜகம் செய்யவும் - இதுபோன்ற
ஆட்களுக்கு பஞ்சமே இல்லை...
தலைவர்கள் மெல் எனக்கு கோபமில்லை...
தன் காசை வீணாக்கும் தொண்டன்மேல்தான்... 
கட்சி விளம்பரத்துக்கு செஞ்ச செலவுக்கு...
குடும்பத்தோட சுற்றுலா போயிருந்தா?
கட்டியவலாவது மெச்சியிருப்பாள்...
கட்டிலாவது களைகட்டியிருக்கும்...
.........................................................................
போங்கடா...
போயி பொழப்ப பாருங்க...
புள்ள குட்டிய நல்லா படிக்கவையிங்க...

No comments:

Post a Comment