Tuesday 14 December 2010

அறுபத்தி நான்காம் நாயன்மார்...



சிவனடியார்களாக
போற்றப்படும் நாயன்மார்கள்;
அறுபத்தி மூவரென்பதே - நம்
அனைவரின் கணக்கு...

அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர்,
மாணிக்கவாசகர், கண்ணப்பர்,
நந்தனார் - என
நீள்கிறது அப்பட்டியல்...

நாயன்மார்களில் பெண்களும்
உண்டென்பதே அதன் தனிசிறப்பு...
சேக்கிழார் பெருமான் எழுதிய
பெரியபுராணம்;
அறுபத்தி மூவரின்
வரலாற்றை பறைசாற்றும்...

இப்பட்டியலில் இன்னொருவர்
உண்டென்பதே என் கருத்து...

சிவநெறி போற்றி;
அவன் தொண்டு செய்வதற்கே;
வாழ்ந்த நாயன்மார்களும் உண்டு...

சிவனடியார்க்கு செய்யும் தொண்டே;
அவன்தொண்டெனக்
கருதிய நாயன்மாரும் உண்டு...

அவர்தான் திருக்குறிப்புத்தொண்டன்...
அவரைப்போலவே இவரும் ஒருவர்!

மூவர் எழுதிய...
"குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிழ்சிரிப்பும்
பணித்த சடையும் பவழம்போல் பால்மேனியும்
இனித்தமுடனேடுத்த பொற்பாதமும்;
பொற்பாதமும் காணப்பெற்றாள்...
மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே" என்ற
தேவாரப் பண்ணிற்கு - மெட்டமைத்து...

உருகாதார் யாருமற்ற;
திருவாசகத்திற்கு இசையமைத்து...
கோடானகோடி தமிழர்க்கு;
கடவுளையும், கன்னித்தமிழையும்  ஒருசேர
தன் இசைத்தேன் தடவி
விருந்தளித்த இறைதொண்டன்;

இராசையா நாயனாரே - அந்த
அறுபத்தி நான்காம் நாயன்மார்...

No comments:

Post a Comment