Friday 17 December 2010

சிதம்பர இரகசியம்...

மூடிய கைகளுக்குள்
மிட்டாய் தேடும் குழந்தைபோல...
இரகசியம் என்றாலே
தெரிந்து கொள்ள துடிப்பது
மனித இயல்பு...
அதுவும் அந்தரங்கமென்றால்
அளவற்ற ஆர்வம் - நமக்கு...
தினமலரின் அன்புடன் அந்தரங்கம் தொடங்கி...
மருத்துவர் மாத்ருபூதத்தின் புதிரா புனிதமா வழியில்...
தமிழகத்தின் அணைத்து தொலைகாட்சியிலும்
இன்று பல வெற்றிகரமான நிகழ்சிகள்
நம் தேடலுக்கு உதாரணங்கள்...
மனித அந்தரங்கத்தை கறைத்து குடித்து
அலுப்பு தட்டிய நம் மக்களுக்கு...
இது சற்று சுவாரசியம் தான் - ஏனென்றால்
இது கடவுளின் இரகசியம்...
ஆம்...
சித்தன் பித்தன் எனப்பாடப்பட்ட;
சிவனுக்கே தெரியாமல் இயற்றப்பட்ட;
சிதம்பர ரகசியம்...
ஆண்டவன் இரகசியத்திற்கு
ஆளுக்கொரு விளக்கம் அளித்தாலும்...
ஆணவம், கர்வம், மாயை நீக்கி
அவனை வேண்டி காணும்போது;
சிவபெருமானும் பார்வதி அம்மையாரும்
தங்க வில்வ இலைகளாய் தோன்றி;
தரிசனம் தருவார்கள் என்று விளக்கமளிக்கிறது
அந்தணர் தரப்பு...
உண்மை கதை என்னவென்றால்?
"வழி மறைத்திருக்குதே - மலைபோல்
ஒரு மாடு படுத்திருக்குதே...
பாவிப் பறையன் இந்த ஊரில் வந்தும்
பாவம் தீரேனோ..." என்று பாடி
நந்தி வழிவிட்டு நாதன் அருள்பெற்ற;
63 நாயன்மார்களில் ஒருவரான;
நந்தனார் சிதம்பரம் கோவிலுக்குள் சென்ற
பாதையை மறைத்ததே - இந்த
சிதம்பர இரகசியம்...
தாழ்த்தப்பட்ட சமூகத்தை
சேர்ந்த ஒருவன் கோவிலுக்குள் சென்றதை
கண்ட பார்பன தீட்சிகன் ஒருவன்;
அவரை தீயிட்டு கொளுத்திவிட்டு...
சிவபெருமானுடன் ஜோதியில் கலந்ததாய்
சொல்லிய பொய்யே - இவர்கள்
கூறும் சிதம்பர இரகசியம்...
இவர்கள் வழி தோன்றியதே
பிரேமானந்தா...
நித்யானந்தா...
ஜெயேந்திரர்...
விஜயேந்திரர்...
சதுர்வேதி...
காஞ்சிபுரம் தேவநாதன்...
சித்து விளையாட்டுக்களும் - என்று
சொன்னாலும் அது மிகையாகாது...

No comments:

Post a Comment