Saturday 4 December 2010

உயிரிலும் மேலான... அன்பு உடன்பிறப்பே...


தவறை சுட்டி காட்ட யாருமில்லை...
அவரை தட்டிகேட்க  ஆளுமில்லை...
நாளிதழ் ஒன்றுண்டா நடுநிலையாய் செய்தி சொல்ல?
தொலைகாட்சி ஒன்றுண்டா தோண்டித்துருவி ஆராய?
எழுத்துறிமை, பேச்சுரிமையென - இன்னும்
பல இழந்தபின்னும்...
ஏன் இந்த பொறுமை - தமிழனுக்கு?
இங்கிலாந்தில் தமிழர்கள் போராடமுடியும்...
இந்திய நாட்டில் முடியாது...
இதுவன்றோ ஜனநாயகம்...
தமிழ்நாட்டில் அதைவிட கொடூரம்
தனியொரு குடும்பம் தரனியாள்வதை பார்த்தீரா?
அண்ணாவின் பெயரை சொல்லி;
அவரவர்க்கு முடிந்தவரை...
அனைத்தையும் சுருட்டுப்பாற்கும்;
திராவிட கட்சிகள்...
இந்துத்வா, காந்தியவாதம் 
பொதுவுடைமை எனச்சொல்லி...
தெளிவாய் குழப்பும்;
தேசியக்கட்சிகள்...
இதற்கும் மேலாய்
குடியரசு தலைவர்...
பிரதம மந்திரி...
பாராளுமன்றம்...
உச்சநீதிமன்றம்...
மாநில அரசுகள்...
அமைச்சர் பெருமக்கள்...
தேவையா இவையனைத்தும்?
ராணுவ ஆட்சி வரட்டும்...
கரைவேட்டிகள் காணாமல் போகட்டும்...
வழுக்கைத்தலையன் வாரியடித்து ஓடட்டும்...
எதற்கெடுத்தாலும் ஒரு விழா...
ஆட்சி நடத்த வாக்களித்தால் - நீ அமர்ந்து
ஆட்டமா பார்க்கிறாய்?
தந்திர நரியே...
சுயநலப் பாம்பே...
தமிழர்கள் சிந்திய குருதிக்கெல்லாம்!!!
தவியாய் தவிப்பாய் நீயே பாரும்...
தழுதழுத்தாலும் உன் வாய்துடைத்து;
தமிழனை உடன்பிறப்பே என்பாயே!!!
அதுதான் உன் பலமோ... 

No comments:

Post a Comment