Tuesday 21 December 2010

பசி வந்தால்?


பசி வந்தால் பத்தும் பறந்து போகும்...
இந்த பழமொழி அனைவரும் அறிந்ததே...
அவையோரும் உணர்ந்ததே...
ஆனால்...
"பசி வந்தால் புலன்கள் புலப்படும்"
என உறக்கச் சொன்னது;
என் வாழ்வில் நடந்த சம்பவம்...
சம்பவமென்றால் அது சரியாகாது...
நாடகமென்றே சொல்லவேண்டும்...
வேலையை விட்ட நானும் என் நண்பனும்...
பசியின் காரணமாய் நடத்தியது...
வருடம்: ஈராயித்து நான்கு
இடம்: ஆண்டவர் நகர், கோடம்பாக்கம்.
நடிகன்: நான்
இயக்கம்: என் நண்பன்
தயாரிப்பு / முதலீட்டாளர்:
சஸ்பென்ஸ் (பிறகு சொல்கிறேன்)
காலையில் இருந்து சாப்பிடல...
கடன் வாங்கவும் யாருமில்ல...
கனகராஜ் வச்சிருந்த டீக்கடை பக்கம்போனா?
தீப்பொறி பறக்க பார்கிறார் அவர்...
என்ன செய்வார் பாவம்!
போட்ட முதலெல்லாம் - நாங்கள்
போட்டுவிட்டோம் வயித்துக்குள்ளே...
என்னதான் செய்யலாம்?
பலத்த யோசனை...
குழம்பி அடங்கிய குளம்போல!
தெளிவாய் யோசனை ஒன்றை இயக்குனர் சொல்ல...
புறப்பட்டோம் புதுக்கடைக்கு...
ஆம் அன்றுதான்
ஒரு உணவகம் திறந்திருந்தார்கள்...
சீவி முடிச்சு சிங்காரிச்சு;
ஒய்யாரமாய் நிற்கும் புதுப்பெண் போல...
சீரியல் லைட்டெல்லாம் போட்டு
ஜொலித்தது உணவகம்...
No Clap...
No Lights...
No Camera...
No Prompting...
Only Director & Artist...
கைலி டி.ஷர்ட் தான் காஸ்டியும்...
இயக்குனர் செய்கை காட்ட;
சற்று பயத்துடனே ஆரம்பித்தேன்
என் நடிப்பை...
பரபரப்பாய் இயங்கிய ஹோட்டலுக்குள்
பயங்கரமாய் உள்ளே நுழைந்த நாங்கள்;
பசியாறினோம் - பையில் பணமில்லாமலேயே!!!
கைகழவுப் போகுமுன்னே இயக்குனர் கண்ணசைக்க...
தட்டிவிட்டேன் - அருகிலிருந்த
ஹாப் பாயில் தட்டுகளை...
என்னாடா ஹோட்டல் இது...
இப்ப நான் என்ன பண்றேன் பாரு என்றேன்...
தழுதழுத்த பேச்சோடு...
என்ன பண்றது குடிச்சவன் அப்படிதான நடிக்கணும்...
உரிமையாளர் ஓடிவந்தார் பயத்தோடு...
சிரிப்பை அடக்கிக்கொண்டு
சீறிப் பாய்ந்தேன்...
நான் யார் தெரியுமா?
அதிர்ந்து போனவரிடம் இயக்குனர் விளக்கி சொன்னார்...
பையன் நெறையா குடிச்சிருக்காப்ல...
பிரச்னை பண்ணுவான் இப்படிதான் என்று...
நாங்கள் ரௌடிகள் என்று நினைத்த அவர்...
பரவாயில்லை தயவுசெய்து
கூட்டிட்டு போங்க பணமே வேண்டாமென்றார்...
தள்ளாடிய படியே வெளியேறினேன்
டேரக்டர் துணையோடு...
நம்பவே முடியவில்லை நானா நடித்தேனென்று...
சிறந்த திரைக்கதை...
நன்றிகளை இன்றும் சொல்வோம் - எங்கள்
பசியாற்றிய பாரிக்கு...
அப்போதுதான் புரிந்தது
அனைவருக்குள்ளும் ஒரு கலைஞன் உண்டென்று...
இப்போது புரிகிறதா பசி வந்தால்
புலன்கள் புலப்படும்...
எங்கள் நாடகத்துக்கு
முதலீட்டாளர் ஐயப்பன் உணவகம்...
ரெண்டு மூணு நாள்ள
சாப்பிட்ட காச குடுத்துட்டோம் - அந்த
அன்னதானப் பிரபுவிடம்...

No comments:

Post a Comment