Thursday 23 December 2010

பிதற்றல்...

கதையே இல்லாத படம்...
காரணமே இல்லாத சண்டை...
கொள்கையே இல்லாத கட்சி...
நன்மையே செய்யாத அரசு...
ஒழுங்கே இல்லாத சட்டம்...
ஒழுக்கமே இல்லாத சாமியார்...
மின்சாரமில்லாத கிராமம்...
மீன்பிடிக்க முடியாத மீனவன்...
ஜனநாயகம் இல்லாத தேர்தல்...
ஜன கன மன தெரியாத மந்திரி...
கூரையே இல்லாத குடிசை...
குடிக்க கஞ்சில்லாத மக்கள்...
வேகம் குறையாத விலைவாசி...
வெங்காயமில்லாத சாம்பார்...
தொட்டுகொள்ளாத காதல்...
தோனியில்லாத கிரிகெட்...
கிசு கிசு இல்லாத சச்சின்...
கீ இல்லாத கார்...
கணவில்லாத தூக்கம்...
காயமில்லாத விபத்து...
புடவை அணியாத பெண்கள்...
போனால் வராத வாய்ப்பு...
தலைவனில்லாத இயக்கம்...
தரம் தெரியாத இணம்...
உண்மையில்லாத வழக்கு...
ஊறுகாய் இல்லாத விருந்து...
இவையெல்லாம் இருக்கும்போது
தலைப்பில்லாமல் எழுதினால் என்ன?
என்றொரு யோசனை இன்றெனக்கு...
அதன் பலனாகவே - இந்த பிதற்றல்...
இடையிடையே இப்படி ஒரு
இடுக்கையும் நானிடுவேன்...
இவனும் ஒரு கவியென நம்பி
இவற்றையெல்லாம் வாசித்த
உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்...
பிதற்றல்கள் தொடரும்...
பின்தொடர ஆளிருந்தால்?

No comments:

Post a Comment