Thursday 6 January 2011

கலைமாமணி!!! ஞானபாரதி!!!

கடவுள் வாழ்த்து...
ஆத்தி சூடி,
இளம்பிறை அணிந்து;
மோனத்திருக்கும் முழுவென்மேனியன்...
கருநிறம் கொண்டு - பாற்கடல்
விசைக் கிடப்போன்...
முகமது நபிக்கு
மறையருள் புறிந்தோன்...
இயேசுவின் தந்தை...
எனப்பல மதத்தினர்
உருவகத்தாலே
உணர்ந்து உணராது...
பரவகையாக பரவிடும்
பரம்பொருள் ஒன்றே...
------------------------------------------------
தமிழ்த்தாய் வாழ்த்து...
கதிர் வெடித்து
பிழம்புவிட...
கடல் குதித்து
சூடாற்ற...

முதுமை மிகு
நிலப்பரப்பில்...
முதல் பிறப்பு
தோன்றிவிட...

நதி வருமுன்...
மணல் சருமுன்...
பதி மதுரை பெருவழியில்...
பாண்டியர் கை பார்த்தவளே...

நின்னை யான் வணங்குவதும்...
நீ என்னை வாழ்த்துவதும்...
அன்னை மகற்க்கிடையே
அழகில்லை என்பதனால்!

உன்னை வளர்த்துவரும்
உன்புகழ் சேர்...
தென்புலவர் தம்மை வாழ்த்துகிறேன்...
தமிழ் புலவர் வாழியரோ!!!
------------------------------------------------
கலைமாமணி! ஞானபாரதி!
வலம்புரி ஜான் அவர்களின்
வைர வரிகள் இவை...
இவரின் கர்ஜனை முடிந்தால்
அவையை கரகோஷம் உடைக்கும்...
ஆங்கிலம் பிரஞ்சு என்று
பலமொழிகள் அறிந்தாலும்...
அண்ணாச்சியின் தமிழ் மோகம்
அவையோருக்கு தீர்க்கும் தாகம்...
"
தன் தாய்மொழிக்கு
தலை வணக்கம் செலுத்தாத
எந்த நாடும் வாழாது...
எந்த சமுதாயமும் வாழாது..."
என சொல்லி!
தமிழர்கள் நெஞ்சத்தில்
தனக்கென இடம்பிடித்தார்...
இந்த நாள் இனியனாலென்று - இவர்
வந்த நாளெல்லாம் இனிதாயிற்று...
இளந்தமிழ் சுவைகொண்டு...
கலந்தாட அவைகொண்டு...
சிலேடையும் சிந்தனையுமாய்...
சிந்தையுள் தோன்றியவற்றை  
சிம்மக்குரல் கொண்டு
சீர்மிகு உச்சரிப்பால் 
பாட்டுக்கள் பல சொன்னார்
பார்போற்ற போய் சேர்ந்தார்...
எத்தனை புத்தகங்கள்...
எவ்வளவு மேடைகள்...
பாராளுமன்ற படையெடுப்பு...
போப் ஆண்டவருக்கு மொழி பெயர்ப்பு...
இப்படி
திக்கெட்டும் தமிழ் முழங்கிய 
வலம்புரி சங்குக்கு...
தலை வணங்கி நாம் சொல்வோம்
தமிழ் வணக்கம் இன்று...

No comments:

Post a Comment