Thursday 20 January 2011

கரத்தான் நைனா...

ஒவ்வொரு அமாவாசையும்
எங்க ஊருல ஹொலிடே...
யாரும் வேலைக்கு போக கூடாதுங்குறது
ஊர் கட்டுப்பாடு (உத்தியோகஸ்தர்கள் தவிர)...
நடவா இருந்தாலும் சரி...
நாத்து பறியா இந்தாலும் சரி...
எந்த வேலையும் நடக்காது...
ஊர் பிரச்சனை...
வாய்க்கா வெட்டு...
குளம் குத்தகை...
புளியமரம் குத்தகை...
போதுவடை நிலம்...
இதப்பத்தியெல்லாம் பேசுற;
ஊர் கூட்டம்...
எங்க ஊரு சட்டசபை...

ஊர் மத்தியில இருக்கிற
மாரியம்மன் கோயில் தான் ஸ்பாட்...
ஊருல உள்ள பெருசு எல்லாம்
ஒன்னு ஒண்ணா வந்து சேரும்...

பாத்து மணி வாக்குல;
கிட்ட தட்ட எல்லாரும் வந்துருவாங்க...
ஒரு ஆள் தவிர...
அவர்தான் "கரத்தான்"...
நாங்கள்லாம் நைனான்னு கூப்பிடுவோம்...

ஆளு லேட்டா வந்தாலும்
அவர் வந்தாதான் கூட்டமே களைகட்டும்...
உள்ள வந்த உடனே;
மடியில இருக்கிற மூக்குப்பொடி டப்பாவ எடுத்து
தலைல ரெண்டு தட்டு தட்டுவாரு...
அவ்வளோதான்...
இளவட்டமேல்லாம்
குதூகலம் ஆயிடும்...
எல்லாரும் இப்படியே இருந்தா
என்னா அர்த்தம்?
யாராவது ஆரம்பிங்கப்பா - ன்னு
ஒரு குரல் கேக்கும்...

அதாகப்பட்டது....
குறுவை சாகுபடிக்கு நாள் ஆயிடிச்சி...
ஆத்து தண்ணிய நம்பிதான் இருக்குறோம்...
போன வருஷம் வெட்டுன வாய்க்கா துந்துடிச்சு...
இந்த வருஷமும் வாய்க்கா வெட்டனும்...
அதுக்காக தான் இந்த கூட்டம்-னு
ஆரம்பிப்பாரு நாட்டாமை...

மூக்குப்பொடியின் நெடி
மூளைக்கேற நைனா
கிடுக்குப்புடி போடுவார்...

அதெல்லாம் இருக்கட்டும்
போன வருஷம்
வாய்க்கா வெட்டு
வரவு செலவு கணக்கு
ஏன்னா ஆச்சு?

கூட்டத்தில் காரசாரம்,
கூச்சல் குழப்பம்
வெடிக்கும்...
எங்கு பாத்தாலும்
முட்டா பு...
மட பு...
கெழ பு... இப்படி
திரும்பிய பக்கமெல்லாம்
பு... வாசம் வீசும்.

அங்கதான் நிப்பார் நைனா
எவன்டா இது
புநா...
சுநான்னு கெட்ட வார்த்தை
பேசிக்கிட்டு...
பெரியமனுசன்
சின்ன மனுஷன்
மரியாதையில்லை?
இதே வேலை பு... யா இருக்கு
உங்ககூட...
முட்டா பு...யோல
................................................................
எவன் எத வெட்டுனா
எங்களுக்கென்ன?
சின்ன பசங்க நாங்க
சிரிச்சிக்கிட்டே இருப்போம்...
இப்பவும் நடக்கும்
இந்த கூத்து...
நைனாவுக்குதான்
வயசாயிடிச்சி - ஆனாலும்
அவர் மூக்குப்பொடியையும்
விடல...
முநா புநாவையும் விடல...

No comments:

Post a Comment