Thursday 20 January 2011

மும்மூர்த்திகள்...

கால் பதிக்க
ஆளில்லா
காலத்தே
தலைநகரில்
தடம் பதித்து...
நூல் பதிக்கும்
அளவுக்கு
நுணுக்கங்கள் கற்றவர்...
நிதானத்திர்ற்கு
நிகரான சொல்
உண்டென்றால் - அது
இவர் பெயராகத்தான் இருக்கும்...
தொடர்ந்து வந்த பாதையில்
இடர்ந்து கிடந்த கற்களையெல்லாம்
அழகாய் அடுக்கி வைத்து
அதன் மேலேயே - கால்
அடியும் வைத்து
உயரம் ஏறிய சிகரம்...
"திரு. மகேஷ் பாபு"

..................................................
அடுத்து வருபவர்
செட்டிநாட்டு தங்கம்...
பலரது வாழ்வை
செட்டிலாக்கிய சிங்கம்...
அனுபவித்த இன்னல்கள்
அனைவருக்கும் வேண்டாமென்று
அனுபவ செல்வாக்கை
அளவாய் பிரயோகிப்பார்...
விற்பனை பிரதிநிதியாய்
வீதியிலே சுற்றிய என்னை
வழி இதுவல்ல...
வாழ்வின் தடத்தை - என்னோடு 
வா காட்டுகிறேன்
என்றார்...
அடுத்த நாளே
அனுப்பிவைத்தார் 
தினகரன் அலுவலகத்திற்கு...
உதவும் குணத்திற்கு
உயிர் வாழும் உதாரணம்...
"திரு.ராமநாதன்"

...........................................................
மூன்றாம் மூர்த்தி
தேனி தந்த
தேனீ...
தந்தி தந்த
ஞானி...
ஊடகத்துறை
சந்து பொந்தெல்லாம் - பள்ளி
ஆசிரியர் போல
உக்கார வைத்து
சொல்லித் தந்தவர்...
புள்ளி விவரம் யாவும்
புத்தியில் புகட்டுவார்...
வாடிக்கையாளர் சந்திப்பு
என்றால் - நம்மோடு
வரிந்துகட்டி புறப்படுவார்...
தட்டியும் கொடுப்பார்
பல பேர் பார்க்க
திட்டியும் தீர்ப்பார்...
எளிமையின் இலக்கணம்
"திரு.ராஜேஷ் கண்ணன்"

............................................................
இம்மூவருக்கும்
பங்குண்டு...
இம்மாமடையனை
மெருகேற்றியதில்...
இவர்கள் மூவருக்கும்
ஒரு தொடர்புண்டு...
இந்தியன் எக்ஸ்ப்ரஸின்
முன்னாள், இந்நாள்
மேலாளர்கள்...
மும்மூர்த்திகளுக்கு என்
காலந்தாழ்ந்த
வணக்கத்தை...
உரித்தாக்குகிறேன்...

No comments:

Post a Comment