Friday 7 January 2011

I Love You...

தேன் குடிக்கும் தருணம்
தெரிகிறது வண்டிற்கு...
அதை கொடுக்கும் நேரம்
புரிகிறது பூவிற்கு...

என்னவளின் எண்ணம் எனக்கு
புரியவுமில்லை...
என் காதல் சொல்லும் நேரம்
தெரியவுமில்லை...

ஐந்தறிவு ஜீவனுக்கு
சொல்லாமல் புரிகிறது ...
ஆறாம் அறிவை பெற்றும் நானோ 
ஈரான்டாய் தவிக்கிறேன்...

இன்றைக்கு சொல்லவேண்டும் - என
என்றைக்கோ முடிவு செய்தேன்...
இன்று வரை சொல்லவில்லை
என்று சொன்னால் நம்புவீரா?

பலமுறை ஒத்திகை பார்த்து
பகல் நேர கனவு கண்டு
விதவிதமாய் சொற்கள் கொண்டு
விவாதிக்க தயாரானேன் - என் காதலை...

அவள் முகம் பார்க்கையிலே
அத்தனையும் மறந்துபோகும்...
நினைத்துவந்த கவிதை யாவும்
பிணைத்து கொள்ளும் ஒன்றோடொன்று...

அவளே புரிந்துகொள்வாளென 
நினைத்திருந்தேன்...
அவள் நினைவை உள்ளே வைத்து
தவித்திருந்தேன்,,,

பித்தனாகி புலம்பும்போது
பின்னால் நின்றாள்...
பிதற்றாதே புலவா என
முத்தம் தந்தாள்...

இன்றும்  சொன்னதில்லை
"நான் உன்னை காதலிக்கிறேன்" - என்று...
மென்று முழுங்குவேன்
என்றவளுக்கு தெரியும்போல...

மனிதர் உணர்ந்து கொள்ள...
இது மனிதக் காதலல்ல...
பூவும் வண்டும் போல
புதிரானது எங்கள் காதல்...

இவ்வுலகிலேயே அழகான
பூ அவள்...
வேறு பூ தேடாத
வண்டு நான்...

No comments:

Post a Comment