Wednesday 12 January 2011

கலைஞருக்கு வாய்க்கரிசி...

யானை கட்டி போரடிச்ச
காலமெல்லாம்
காணாம போச்சு...

ஏறு பூட்டி சேறுகண்ட
நேரமெல்லாம்
எங்கேயோ போச்சு...

நெல்லு கொட்டும் பத்தாயம்
நிக்குது இப்ப
நிற்கதியில...

உள்ள கொட்ட
ஒண்ணுமில்லாம உடைஞ்சே போச்சு
எங்க வீட்டு குதிரு...

படியளக்கும் வெவசாயம்
அடிவயித்தில 
அடிச்சதால...

பறவையும்
மரக்காலும் 
பரணியில கெடக்குதுங்க...

கையில உள்ள
பணத்த போட்டு
கை டிராக்டர் வச்சி உழுதேன்...

காதுல மூக்குல
கெடந்தத வச்சி
கால் வாசி பயிராக்குனேன்...

களை புடுங்க
காசில்லாம
கை மாத்து வாங்குனேன்...

புகையான் அடிச்சிதுன்னு  
பொண்டாட்டி தாலிய
அடகு வச்சேன்...

வானம் பாத்த பூமி
இன்னைக்கு
விசார்ப்புக்காக காத்து கெடக்கு...

போன மாசம் மழையால
பயிரெல்லாம்
நாசமாச்சி...

அரசாங்க கணக்கு 
ஹெக்டேருக்கு
ஐயாயிரம்...

அடகு வச்ச
தாலி மட்டும்
எட்டாயிரத்துக்கு இருக்கு...

ஏக்கருக்கு
ரெண்டாயிரம்
என்ன கணக்குனு புரியல...

எங்க ஓட்டுல ஜெயிச்சவன்
கோடி கோடியா
கொள்ளையடிக்கிறான்...

ஓட்டு போட்ட
குத்தத்துக்கு
ஓட்டாண்டியா நிக்கிறோம்...

தேடி வந்து ஓட்டு கேக்கும்
தேவி..யா மொவனுங்க
தேர்தல் முடிஞ்சிட்டா ஆளே வர்றதில்ல...

கும்பிட்டு வாசல் வரும்
கு...காரி மொவனுங்க
குளிர் காயிறாங்க எங்க வயிதேரிச்சள்ள...

நாசமா போங்கடா
நாயிக்கு
பொறந்தவங்களா...

பண்றதெல்லாம்
பண்ணிபுட்டு
பொங்கலுக்கு இலவச பொருளா?

வரவேண்டியத குடுடா
வழுக்கத்தலையா - உனக்கு
வாய்க்கரிசி நாங்க போடுறோம்...

No comments:

Post a Comment