Thursday 27 January 2011

காதலென்ன கத்திரிக்காயா?

பால்குடி மறக்காத
பிள்ளையின் அழுகை
என்றே பெற்றோர்கள்
நினைப்பதுண்டு...

காலம் தரும்
மருந்தினால் - இந்தக்
காதல் புண்ணும்
ஆறுமென்று...

அழுகின்ற
குழந்தைக்கு
ஆறுதல்
சொல்வது போல...

அழகாய்
விளக்கங்கள்
ஆயிரம்
சொன்னாலும்...

அவர்கள்
ஏற்க மறுப்பது
ஏன் என்று
நினைத்ததுண்டா?

அவர்கள் வாழும்
உலகமே வேறு - அதை
உற்றுநோக்கி
நீயும் பாரு...

கண் விழித்து
பார்க்கும்போது
கண்முன்னே
அவள்முகம்...

கண்ணாடி நான்
பார்த்தால் - என்  
முன்னே அவள்
நிற்ப்பாள்...

நின்றாலும், நடந்தாலும்
உண்டாலும்; 
நினைவில் எப்போதும்
அவள் ஞாபகம்...

அவளைப்
பார்க்காத நாள் 
எனக்கு பைத்தியம்
பிடிக்கும்...

ஒட்டுமொத்த
உலகமே - அவள்
ஒருத்தியை
சுற்றித்தான்...

என்பவனிடம்
பெற்றகதை
வளர்த்த கதை
எடுபடுமா?

அல்லது
பெற்றவளின்
கண்ணீர்தான்
விடை தருமா?

மனம் மாறி
வந்தாலும்
பிள்ளையின்
மனவேதனை தீருமா?

ஒப்பந்தம்
போடுவோமே - அவர்கள்
காதலை
ஒற்றுக்கொள்ள...

வளர்ந்து காட்டச்
சொல்வோம்...
வாழ்வில் வென்று
காட்டச்சொல்வோம்...

பெற்றோர், சமுதாயம்,
எதிர்காலம் இவ்வனைத்தையும்
தாண்டி துளிர்விடும் ஒன்று
நன்மைக்கு பயன்படட்டும்...

காதலும்
ஒரு நெருப்புதான்
பிள்ளைகள் கருகுவதை
பார்த்ததில்லை?

வேறு இடத்தில
திருமணம் என்றால்
வேரூன்றிய காதல்
போய்விடுமா?

பறித்தவுடன்
மீண்டும் காய்க்க...
காதலென்ன
கத்திரிக்காயா?





No comments:

Post a Comment