Tuesday 25 January 2011

ஜீவநதி

பிறக்கும்போதும்
அழுதிட்டோம்...
பிறந்தபின்னும்
அழுதிட்டோம்...

உறக்கம் வரும்வரை
அழுதிட்டோம்...
உறங்கி பின் விழிக்கையில்
அழுதிட்டோம்...

பசித்தபோதும்
அழுதிட்டோம்...
பலகாரம் வேண்டி
அழுதிட்டோம்...

பள்ளி செல்கையில்
அழுதிட்டோம்...
பாடம் படிக்கையில் 
அழுதிட்டோம்...

பெண் வாழ்வில்
வந்துவிட்டால்
பேரழுகை
நாம் கொண்டோம்...

பேதை அவள்
பிரிந்து சென்றால்
தாடி வைத்து
தழுதழுத்தோம்...

வேலை, குழந்தை,
பெற்றோர், உற்றார்,
இவ்வனைத்தும் தழைத்தோங்க
இமை மூடி அழுதிட்டோம்...

இறுந்தவன் 
இறந்துபோனால் 
இரவு பகலாய்
அழுதிட்டோம்...

வற்றாத ஜீவநதி
தமிழ்நாட்டில் இல்லையாம்!!! 
வற்றியதே இல்லை
எங்கள் ஜீவன் வற்றும் வரை...

No comments:

Post a Comment