Saturday 8 January 2011

எவ்வளவோ பண்ணிட்டோம்... இதைப்பண்ண மாட்டோமா?

தென்னை மட்டையில்
தொடங்கினோம்...
தெருவெல்லாம்
ஆடினோம்...

ஓடுகளை 
உடைத்தெறிவோம்...
கண்ணாடிகளை
தகர்த்தெறிவோம்...

முட்டு சந்தும்
விட்டதில்லை - எங்களை
தார் ரோடும்
சுட்டதில்லை

வெற்றி தோல்வி இரண்டையுமே
பெற்று வந்தோம்..
வெல்ல வேண்டிய போட்டியிலும்
தோல்வியுற்றோம்...

பள்ளிப் பருவம் தொட்டு
இன்று வரை ஆடுகிறோம்...
பண்ணிய தவறையெல்லாம்
உடனுக்குடன் திருத்திடுவோம்...

ஏங்கிய நாட்கள் உண்டு
இனிமேல் முடியமா என்று...
இப்போது ஒரு வாய்ப்பு
எதற்க்கினி கவலை...

எதுவானாலும்
பார்த்துவிடுவோம்...
எவ்வளவோ பண்ணிட்டோம்
இதைப்பண்ண மாட்டோமா?

No comments:

Post a Comment