Tuesday 11 January 2011

பொங்கலோ... பொங்கல்...

கண்ணுக்கு புலப்படும் கடவுளுக்கு - இம்
மண்ணில் விளையும் பொருள் கொண்டு
விண்ணதிர சொல்லிடுவோம்...
பொங்கலோ பொங்கல்!!!

பழையவை கழித்து புதியவை புகுத்தி
பிழைதனை திருத்திடுவோம்...
புதுமைகள் படைத்திடுவோம் - வரும்
பொன்னான நாட்களிலே...

நான்கு கால் பாய்ச்சலிலே - நம்மோடு
நாள்முழுதும் பாடுபட்ட...
கால்நடைக்கும் விருந்துவைப்போம்...
கௌரவிப்போம் அவைகளையும்...

சுற்றமும் நட்பும்..
உற்றாரும் உறவினரும் - சேர்ந்திருந்து
தைப் பொங்கல் கண்டிடுவோம் - தமிழர்
திருநாளை போற்றிடுவோம்...

No comments:

Post a Comment