Wednesday 17 November 2010

When terrorism is instant... Why not justice be so....

போன வாரம்
மோகன்ராஜ் என்கிற மோகனகிருஷ்ணன் - போலீசாரால்
சுட்டுக்கொல்லப்பட்டான்...
யார் இந்த மோகன்ராஜ்; நண்பனுடன் சேர்ந்து...
வாழவேண்டிய இரு பிஞ்சு மலர்களை
நாசமாக்கிய படுபாதகன்...
மேலிடத்து பிரஷரோ?
அரசின் மறைமுக ஆணையோ - அதெல்லாம் தெரியாது
நவம்பர் ஒன்பது...
காலை ஐந்து முப்பது... மோகனாசுரன் - கொல்லப்பட்டான்
கோவையில் அன்றுதான் தீபாவளி...
ஊர் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட!
ஆரம்பித்தது தலைவலி - போலீசுக்கு.
வேற யாரு... நம்ம
தேசிய மனித உரிமை கழகமும்,
மகாகனம் பொருந்திய சில மனிதநேயமிக்க மான்பாளர்களும் தான்...
அவங்க கேள்விகள் என்னன்னா?
நீதிமன்றமும், சட்டமும் இருக்கும்போது;
எப்படி நீங்கள் குற்றம் சாட்டப்பட்ட ஒருவனை சுட்டுக்கொள்ளலாம்? 
இன்னும் சிலபேர் கேக்குராங்க...
கண்ணுல பட்டவன எல்லாம் கன்னா பின்னான்னு சுட்ட 
தீவிரவாதி அஜ்மல் கசாபையே நாம பொறுமையா இன்னும் விசாரிக்கும்போது...
ரெண்டு கொலை, ஒரு கற்பழிப்பு பண்ண மோகன்ராஜ ஏன் சுட்டாங்க?
...........................................
சட்டத்துல இருக்கிற ஓட்டைதான்
நம்ம சட்டசபையை விட பெருசா இருக்கே...
அப்பறம் எங்கிருந்து நீங்க நீதிமன்றத்துல வழக்கு நடத்தி...
தண்டனை குடுத்து...
அவன் திருந்தி - நடக்குமா இதெல்லாம்...
அது எப்படி?
என்கவுன்ட்டர் பண்ணும்போது மட்டும் மனித உரிமை கழகம் கேள்வி கேக்குது...  
தமிழ்நாட்டுல ஒவ்வொரு நாளும்
மனித உரிமைகள் பறிக்கபடுவது உங்களுக்கு தெரியலையா?
இல்ல கண்ண மூடிபிங்களா? 
கசாப பத்தி பேசுறீங்களே...
உங்க நெருங்கிய சொந்தக்காரன் எவனையாவது
கசாப் சுட்டிருந்தா...
இப்ப விசாரிக்கிற முறை சரின்னு சொல்லுவீங்களா?
யாராவது விளக்கம் சொல்லுங்கள் - இந்த
விளங்காதவனுக்கு...

No comments:

Post a Comment