Friday 19 November 2010

போற்றுதலும் தூற்றுதலும் கூட - இங்கே போதிமரங்கள் தான்...

விமர்சனங்கள் - அரசியல், கலை, விளையாட்டு
இவைகளுக்கு மட்டும் உரித்தானதல்ல...
சாமானியனுக்கும் அது சரியானதே...
எந்த ஒரு செயலை
செய்தாலும் அதில் தனித்துவம் காட்டுவதே - நம்
அனைவரின் அவா!!!  
இறுதியாக அச்செயலை
யாராவது பாராட்டிவிட்டால் - முத்தாய்ப்பு...
நல்ல விஷயங்கள் பாராட்டுக்குரியவை...
ஆனால்
நம்மில் யாரும் அதை செய்வதில்லை.
பிஞ்சுக்குழந்தை முதல் - உயிர்ப் 
பிரியப்போகும் கிழவன் வரை...
அனைவருமே பாராட்டுக்காக ஏங்குகிறோம்.
ஆயிரம்தான் இருந்தாலும்;
அடிமனதில் ஒரு ஏக்கம்...
யாரும் கண்டுகொள்ளவில்லை என்றால்.
செல்லும் பாதை சரியென சொல்ல... 
தவறி செல்கையில் திசையைக்காட்ட...
தேவை நமக்கு விமர்சனங்கள்!!!
விமர்சிப்போம்...
விவாதிப்போம்...
வாழ்க வளமுடன்...

No comments:

Post a Comment