Thursday 18 November 2010

தப்பு பண்ணாம இருக்கனும்னா... நான் சொல்றத கேளுங்க...

தலைப்ப பாத்த உடனே
நீயென்ன அவளோ பெரிய அளான்னு கேக்குறீங்களா?
இருங்க நானே விளக்கமும் சொல்றேன்...
"தவறு என்பது தவறி செய்வது...
தப்பு என்பது தெரிந்து செய்வது" - கண்ணதாசன்.
இதில எனக்கு உடன்பாடு இல்லிங்க...
இங்க யாருமே எதையுமே தவறி செய்வதில்ல!!!
அறியாமை,
அறிய முற்படாமை,
அலட்சியம் - எல்லாத்துக்கும் மேல  
செய்த குற்றத்தை ஒப்புக்கொள்ள தயக்கம்...
அதனால எல்லோரும் சொல்வது தெரியாம செஞ்சிட்டேன்...
நானும் சொல்லிருக்கேன் - வேக்கப்படுறேன்!!!
எதுக்காக கண்ணதாசன் 
அப்படி சொன்னாருன்னு யோசிச்சா?
அடுத்து வரியில இருக்கு பதில்
"தவறு செய்தவன் திருந்த பார்க்கணும்...
தப்பு செய்தவன் வருந்தி ஆகணும்..." .
என்ன ஒரு ஆளுமை - அவர் எழுத்தில்!!!
சரி நம்ம விஷயத்துக்கு வருவோம்...
நம்ம வயசு கோளாறா?
இல்ல புத்தி கோளாறான்னு தெரியலங்க?
எதையாவது செய்யாதன்னு யாராவது சொன்னா?
அதை உடனே செய்ய சொல்லுது...
சிகரட் புடிக்காத...
தண்ணி அடிக்காத...
பொண்ணுங்க பின்னாடி சுத்தாத...
இன்னும் நெறையா இருக்கு - அதெல்லாம்
சென்சார் பண்ணியாச்சு...
இதெல்லாம் போயி என்கிட்டே சொல்லலாமா?
நா என்ன பண்ணியிருப்பேன்னு எல்லாராலும் யூகிக்க முடியும்...
நீங்க நெனச்சது சரிதான்.

தப்பு பண்ணிக்கிட்டேதான் இருந்தேன் - நேத்துவரை...

மேல சொன்ன தவறுகள் எதையுமே
நா இப்ப செய்யிறதில்ல!!!
எப்படி இது சாத்தியம்?
ஒரு மானுடன் மகானாக காரணம் என்ன?
யாராலும் யூகிக்க முடியாது!!!
நானே சொல்றேன்...
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
சபரிமலைக்கு மாலை போடபோறேன்...
நீங்களும் போடுங்க - கொஞ்ச நாளைக்கு நல்லவனா இருப்போம்...
சாமியே சரணம் ஐய்யப்பா....

No comments:

Post a Comment