Monday 15 November 2010

ராசாவே உன்னை நம்பி இந்த டெலிகாம் இருக்குதுங்க...

நானும் கொஞ்ச நாளா பாத்துகிட்டுதான் இருக்கேன்...
ஆயிரம் ருபாய் லஞ்சம் வாங்கிய ஆர்.டீ.ஓ. பிடிபட்டார்,
ஐநூறு ருபாய் லஞ்சம் வாங்கிய வீ. ஏ. ஓ. பிடிபட்டார்,
பத்தாயிரம் வாங்கிய சப் - இன்ஸ்பெக்டர் பிடிபட்டார்,
இவ்வளவு ஏன்?
...கலர் டீ.வி வாங்கும்போது லஞ்ச ஒழிப்புதுறை ஆய்வாளர் பிடிபட்டார்னு.....
உடனுக்குடன் செயல்பட்டீங்க...
சுமார் ஒன்றரை லட்சம் கோடி ஊழல் பண்ண நம்
ராசா விஷயத்துல இப்பதான் உங்க கவனம் போகுதா....
கருணாஸ் சொல்றமாரி
இதுதான் இங்க டக்கா...
இத செயிரதுக்கு
உச்சநீதிமன்றத்துலேந்து காரிதுப்பி...
எதிர்கட்சிகள் கழட்டி அடிச்சி...
மீடியாக்கள் ஓடியாந்து உங்கள கொடைஞ்சாதான்...
லேசா அசையிரிங்க...
பாவம் நீங்க என்ன பண்ணுவிங்க?
சம்மந்தபட்டவர், "எல்லாமே பிரதம மந்திரியின் மேற்பார்வையில் தான் நடந்தது"னு சொல்றாரு...
எவன் எத்தணை கோடி அடிச்சா நமக்கு என்ன...
இந்த இன்னிங்க்ஸ்ல சச்சின் பதிமூணு ரன்னுல அவுட் மச்சான்னு
சொல்லி நம்ம பசங்க பீர் பாட்டில ஓபன் பன்னிட்டானுங்க...
சரிதான் போ கெடக்குன்னு - நானும்
சரக்க அடிச்சிட்டு சவுங்கை ஆயிட்டேன் - வழக்கம்போல...
பாரத சமுதாயம் வாழ்கவே!!!
வாழ்க வாழ்க...
பாரத சமுதாயம் வாழ்கவே!!!

No comments:

Post a Comment