Monday 29 November 2010

செம்மொழி பூங்காவும்... செந்தமிழன் பிழைகளும்...

அமைதி பூங்காவில் ஓர்
அறிவியல் பூங்கா...
திருக்குவளையார் திறந்து வைத்தத்
தமிழ் பூங்கா...
வண்ண வண்ண பூக்கள்...
விதவிதமாய் தாவரங்கள்...
சின்னதாய் ஒரு நீர்வீழ்ச்சி...
சிறிய வாத்துக்கூட்டம்...
சிறகடிக்கும் பட்டாம்பூச்சி...
நண்கடர்ந்த மரங்கள்...
நடைபாதை பாலம்...
நடுவே ஒரு கலையரங்கம்...
என பொறியியலில் பொளந்து கட்டிய
நமது வல்லுநர்களை பாராட்டியே ஆகவேண்டும்...
அதே நேரத்தில்...
பிழைகளையும் சொல்லவேண்டிய கடமை எமக்குண்டு...
தாவரங்களின் பெயர் பலகையில்
எழுதியிருக்கும் தமிழ்ப்பெயர்கள் - பல
ஆங்கில சொற்களின் நேரடி மொழிபெயர்ப்பே!!!
ஏன் இந்த பிழையென கேட்க்கும்போது?
கால அவகாசம் காரணமாக சொல்லப்படுகிறது...
சீக்கிரமே அதை சரிசெய்தால் நன்று...
அடுத்தது பொதுமக்கள்.............
எட்டு கோடி செலவு செய்து;
இருபது ஏக்கர் நிலப்பரப்பில்;
அமைந்திருக்கும் அழகிய தாவரவியல் பூங்கா...
அதை நாம் அசுத்தப்படுத்தலாமா?
திறந்து வைத்து ஐந்து நாட்கள் கூட ஆகவில்லை...
அதற்குள் பிளாஸ்டிக் பொருட்கள்...
அலட்சியமாக  இல்லாமல் ...
கொஞ்சம் பொறுப்போடு பாதுகாத்தால்!!!
நன்மை நமக்கே - நாம் 
பெருமையோடு சொல்லிக்கொள்ளலாம்...
அமைதிப்பூங்காவில் ஒரு அழகிய பூங்காவென்று...

No comments:

Post a Comment