Thursday 25 November 2010

வாழ்த்துகள்...

தமிழனின் துயர் துடைக்க - தரணியே 
தயங்கியபோது தனியொரு மனிதனாய்
தூக்கினாய் ஆயுதம்...
தரங்கெட்ட தமிழ்க்குடியில் 
பிறந்திட்ட மாவீரா
உன்னை மறக்குமா பாரதம்...
நாய் பெற்ற தெங்கம்பழம்
என்றொரு பழமொழி தமிழிலுண்டு...
அதுபோலவே...
நாங்களும் பெற்றோம் உன்னை...
உருட்டியே விளையாட முடிந்தது - எங்களால்
உள்ளிருப்பதை அறிய முடியவில்லை...
ஆம்...
அதுவே நடந்தது இந்த தமிழ்நாட்டில்...
தமிழனென்றான் ...
கலைஞனென்றான் ...
முற்றிய பழமென்றான்...
முத்தமிழ் அறிஞரென்றான்...
இந்திய நாடென்றான்...
இறையாண்மை இதுவென்றான் ...
இத்தாலிப்பெண் என்றான்  - இவரே
தலைவியுமென்றான்...
உன்னை ஆதரித்தால் - பொடாவாம்!
தமிழனாக பிறந்ததற்கு வெட்கப்படுகிறேன் - இங்கு
தலைவனாக சில தறுதலைகள் உள்ளனவே...
உன்னுடன் சேர்த்து;
உனை ஈன்ற தமிழ்மன்னையும் வணங்குகிறோம் - இனி
தமிழனாக மட்டும் பிறக்காதே...
தீவிரவாதி என்பான் உன்னை...

No comments:

Post a Comment