Tuesday 16 November 2010

மழை... அம்மா... அப்பா... கெழவி...

இசையருவி
காதில் பாய...
இணக்கமாய்

காதல் கணவோடு...
உறக்கத்தில் இருந்த என்னை...
எழுப்பியது ஒரு விளம்பரம் - இரக்கமே இல்லாமல்...
கண் விழித்து பார்த்தபோது

கனமழை...
என்ன ஒரு ஆச்சரியம்
!!!
செய்திகளில் ரமணன் சொன்ன பிறகும்

மழையா என்று?
மகிழ்ச்சியோடு தந்தியை புரட்ட...
மனசுக்குள் ஞாபகங்கள்
பந்திவைத்தது...
ச்ச எவ்வளவு நாளாச்சு?
எப்படா ஸ்கூல் பெல் அடிபாங்கன்னு காத்திருந்து...
பெல் சத்தம் முடியும் முன்பே;
மூன்று கிலோமீட்டர் தாண்டி ஓடி...
ஆலங்கட்டி மழையில அடிவாங்கிக்கிட்டே ஐஸ் பொருக்கி...
நனைஞ்சிகிட்டே வீட்டுக்குள் போனா...
அடுப்படியில் இருந்து அம்மாவின் குரல்...
எங்கயாவது இது அடுக்குமா - செத்த நின்னு வந்தாதான் என்னா?
திட்டிகிட்டே துவட்டுவாங்க தன் செலையாள...
நல்ல வேலை அப்பா வயலுக்கு போயிருப்பார்...
அடுத்தது பொறி அரிசி, பக்கோடா, சூடா டீ...
எல்லா வாயும் ஒரே பிசி
எப்போதுமே மந்தமா கேக்குற கெழவி காது;
அப்பமட்டும் கரெக்டா கேக்கும்...
ஏ... தாஸு...
கொல்லையில சத்தம் கேக்குது தேங்கா உழுந்திருக்கும் போய் எடுத்துட்டு வா...
என்ன ஒரு கொலைவெறின்னு கெழவிய திட்டிகிட்டே போய் பாத்தா;
தேங்கா மட்டுமா...
அவித்தி கீற மரம்
அடியோட சாஞ்சிருக்கு - போச்சுடா
இனிமே ரெண்டு மூணு நாளைக்கு தன்னிசாறுதான்...
திண்ணையில உக்காந்து
ஆயாகூட தாயம்...
சுடசுட சோறு...

மொச்சக்கொட்ட கொழம்பு...
எல்லாத்துக்கும் மேல - எப்பவுமே
கோவமா இருக்குற அப்பா அப்பமட்டும் சந்தோஷமா!!!
கடைசியா தூக்கம் - அம்மா புடவைய போத்திகிட்டு....
என்ன ஒரு வாழ்கை...
பொலம்பிகிட்டே கெளம்பிட்டேன் - வேளைக்கு...
அப்பதான் மகேஷ்பாபு அண்ணா சொன்னது ஞாபகம் வந்தது...
"முன்பெல்லாம் வாழ்வதற்காக வேளைக்கு சென்றோம், இன்று வேளைக்கு போவதற்காக வாழ்கிறோம்."
மீண்டும் சந்திப்போம்...





3 comments:

  1. oru manithan vazhgayil oru varalaru irukum athai avan manathukul vaithu pothaithu antha varalatrin sudhanthirathai kodugamarukuran antha varalatrai makkalodu pagirvathe siranthathu endra thathuvathai nirupithuvittai athumathiri idhai paarkum manithan thanathu kuzhanthai gala vazhgaiyai thirumpi paargavaithai nanpa nandri

    ReplyDelete
  2. உங்கள் எழுத்துக்கு வரவேற்பு ,,,,,,,,,,நன்றாக உள்ளது தொடரட்டும் ,,,,,,,,,,,ப . கெளதம்

    ReplyDelete
  3. கருத்து தெரிவித்த நண்பர்களுக்கு நன்றி...
    விமர்சனங்கள் தொடரட்டும்...

    ReplyDelete