Sunday 27 March 2011

கடமையை செய்வோம்... உரிமையை கேட்போம்...


எத்தனை மொழிகளில்
வரையறை தந்தாலும்...
மக்களாட்சிக்கு தமிழ் தந்த
பெயர் குடியரசு...

...இங்கு எவரேனும்
ஒருவர் சொல்லட்டும்

"மக்களால் மக்களுக்காக மக்களே"
செய்யும் ஆட்சி...
இங்கு நடக்கிறதா?

அவரவர் மக்களுக்காக
அவரவர் மக்களால்
அவரவர் மக்களே செய்யும் ஆட்சி...
நடைமுறையா?

சாமானியனுக்கு அரசியல்
என்பது ராகேட் சைன்ஸ் ஆகிப்போனதே...
அதற்க்கு யார் காரணம்?

கொலை செய்தவனும்
கொள்ளை அடிப்பவனும்
இந்த நாட்டை ஆள்வதுதான்
நாகரீகமா?

இளைஞர்கள் இங்கு வந்தால்
இந்தியா ஒளிரும் என்கிறீரே!!!
புது ரத்தத்திலும் - உங்கள் எண்ணம்
புரையோடி போவதற்கா?

பல்லாயிரம் கோடி
கடன்வாங்கித்தான் என் நாட்டை
வல்லரசாக்கனுமா?
வட்டிக்கு கடன்
வாங்கி - நம் தாய்க்கு
பட்டுப்புடவை கட்டனுமா?

இனியாவது தவிர்த்திடுவோம்
இது போன்ற இலவசத்தை...
இலவசங்கள் அல்ல - அவை
நம் கழுத்துக்கு நாமே போடும்
சுருக்கு கயிறு...
நம் நாட்டுக்கு நாமே தோண்டும்
ஆழ் கிணறு....
புதையுண்டால்
பிழைக்க வாய்ப்பில்லை...

அடுத்த ஐந்தாண்டுக்கு...
நம்மை ஆளப்போகும்
ஒரு சபையை;
நாட்டின் தலை எழுத்தை மாற்றப்போகும்
ஒரு அரசை தீர்மானிக்க...

இதுவே நேரம்
சிந்தித்து செயல் படுவோம்...
வாக்களிப்பது நமது உரிமை...
வாக்களிப்பது நமது கடமை....
49 - O என்பதும் ஓட்டுதான்...


No comments:

Post a Comment