Sunday 20 March 2011

யதா யதா ஹி தர்மஸ்ய.....


அநியாயங்கள்
அரங்கேறும் போதெல்லாம்
அழையா விருந்தாளியாக! 
அப்பொழுதே வந்திடுவார்...

எங்கோ நடக்கும்
கொள்ளையையும்;
கொலையையும்!
எங்கிருந்தோ வந்து தடுத்திடுவார்...

அதனையும்  மீறி
நடந்துவிட்டால்?
அன்னாரின் பழிவாங்கும் எண்ணம்
பலரது உயிர் வாங்கும்...

நாடி நரம்புகள்
புடைத்து; கோபம்
கழுத்து வழியாக
கபாலத்தை சென்றடையும்...

தீப்பிழம்பு
திரண்டு வந்து...
அவர் கண்களில் 
காட்சி தரும்...

இங்கு பிடிக்க
ஆளில்லாமல் - தீவிரவாதியை 
இங்கிலாந்து சென்று
பிடித்திடுவார்...

பக்கம் பக்கமாக
வீர வசனங்கள்...
அங்கொன்றும் இங்கொன்றுமாக
பஞ்ச் டயலாக்குகள்...

பாவம் செய்வோரை
பார்த்துவிட்டால் போதும்...
பின்னங்கால் பிடரியில் அடிக்க
விரட்டிடுவார்...

கடைசி மூச்சு உள்ளவரை...
கடமையை செய்திடுவார்...
காலன் அதற்குள் உயிர் பிரித்தால்?
மீண்டும் பிறந்து முடித்திடுவார்...

எத்தனை ஸ்டார்கள்...
எத்தனை தளபதிகள்...
எத்தனை நாயகன்கள்...
எத்தனை புயல்கள்...

வெள்ளித்திரையில் மட்டும்
வேங்கை முகம் காட்டுகின்றாரே?
இந்தியத் தாயின்
பிள்ளைகள் தவிக்கையில் இமயமலை  செல்கின்றாரோ?

அரிதாரம் பூசிக்கொண்டு 
அவதாரம் எடுக்கும்போதுதான்...
அவர்களுக்கு வீரமும்
தியாகமும் வரும் போல!!!

நடந்து முடிந்த
அக்கிரமங்களுக்கு பழிவாங்கவும்...
நடந்துகொண்டிருக்கும்
அத்தனை கொடுமைக்கும் விடை காணவும்...
நடக்கப் போகும்
அழிவுகளை தடுக்கவும்...
ஒரு நாயகனும் வருவதில்லை...

பொருள் ஈட்டவும் - தங்கள்
துதி பாடவும் மட்டும்; அவர்களுக்கு
தமிழன் வேண்டும்...
தமிழ்நாடு வேண்டும்...

தெளிவான கொள்கை...
உயர்ந்த நோக்கம்...

தமிழன் தன்னிலை
அறியும் வரை!
தொடரும் இவர்கள்
தெருக்கூத்து...

தெளிவோம்...
துணிவோம்...
தொடர்வோம்...

No comments:

Post a Comment