Wednesday 9 March 2011

வேண்டுதல்...

காலையில் தான்
காமாட்சி வந்தாள்...
அவா கேட்டபடியே
ஆத்துக்காரன் அமைஞ்சாலும்
மாமியாரும், நாத்தனாரும்
கொடுமை பண்றாளாம்!!!

மதியம் தான் மனோகர் வந்தான்
இன்னும் அந்த படவாக்கு
வேலை கிடைக்கலையாம்!
கவர்மென்ட் வேளை தான் வேணுமாம்...

நேத்து தான் வந்துட்டு போனாள்
நேக்கு பூமாலை தொடுக்கும் நிவேதா...
கல்லூரி கட்டணம் செலுத்த
இன்றுதான் கடைசி நாளாம்...

செத்த நாழி முன்னாடிதான்
ஒரு காதல் ஜோடி வந்து
கயவாளித்தனம் பண்ணினது...

போதாதுன்னு கட்சி காரா
எல்லாம் வரா...
கூட்டணி அமையனுமாம்...
தேர்தலில் ஜெயிக்கனுமாம்...
மந்திரியா ஆகணுமாம்...
இப்படி எத்தனையோ 
வேண்டுதல்கள்...
விதவிதமா வழிபாடு பண்றா...

தெரு மூலைல
தேமேன்னு உக்காந்திருக்கேன்...
காக்கவும் குருவியும்;
என் தலைலதான்
கக்கா போயின்றுக்கு...
அதை யாரும்  
கண்டுக்க மாட்றா...

தினம் என் உண்டியல்ல
திருடன் காசையெல்லாம்
எடுத்துண்டு போறான்...
அவனாவது பரவால்ல
வயித்துக்காக திருடுறான்...

நான் பால் குடிக்கிறேன்னு சொல்லி
ஊருல உள்ள பாலையெல்லாம்
பிரம்மஹத்திகள்... 
என் மேல கொட்டுறா...

வேண்டுதல்ன்னு சொல்லிண்டு
மூட்டை மூட்டையா
தேங்காய் உடைக்கிறா...

இதையெல்லாம் யாருடா கேட்டா?
ரெண்டு வருஷமா நானும்
ஒரே வேட்டிய கண்ட்டிண்டு இருக்கேனே?
நாத்தம் மூக்கை அடைக்கிறது...
அதை யாராவது செத்த மாத்துங்கோளேன்...

No comments:

Post a Comment