Tuesday 8 March 2011

பெண்மை போற்றுதலே ஆண்மை...

பூவினும் மென்மையும் 
பூமியினும் பொறுமையும்
கொண்ட பூவையரை...

அடக்குவதும்
முடக்குவதுமே 
ஆண்மை என்று...
ஆண்டுகள் பலநூறாய்
ஆண்டுவந்த ஆணினமே...

முன் பின் அறிமுகமில்லா!
முகவருக்கு வணக்கம் வைத்தோம்...
அலுவலக பனி நிமித்தம்
அனைவரையும் அனுசரித்தோம்...

சகலமும் நாமென
சகித்துக்கொள்ளும் ஒருத்தியை...
சக மனிஷியாக;
சமமாக நடத்துவதில்...
என்ன குற்றம் கண்டீர்?

பெண்ணவளை;
பூவென்றும் புகழ வேண்டாம்...
பூமியென்றும் போற்ற வேண்டாம்...
நண்பனாக நேசிப்போம்...
நாகரீகம் கர்ப்பிப்போம்...
வீடாள வந்தவளை;
நாடாள மாற்றிடுவோம்...

அடக்கியாள்வது
ஆண்மையாகாது...
பெண்ணடிமை தனமென்றும்
போற்றலாகாது...

கூண்டுகிளிகள் கூடு
தாண்டி செல்லட்டும்...
வேண்டுவன யாவும்
தாவியது வெல்லட்டும்...

பொத்திவைத்த உணர்வுகள் யாவும்
புத்துயிர் கொள்ளட்டும் - அவள்
பொக்கிஷமாய் அடக்கிவைத்த
புன்சிரிப்பு பொங்கட்டும்...

No comments:

Post a Comment