Monday 14 March 2011

Miss you my friend...

நீண்ட நாட்களாக
நீங்காத சந்தேகமொன்று!!!
அண்மையில் தான்
அறிந்துகொண்டேன்...

நள்ளிரவு நேரமது
சர சரவென
சத்தம் கேட்கும்...
திடுதிப்பென
தூக்கம் களைந்து பார்த்தால்?
சத்தம் நின்றுவிடும்...

வீட்டில்
மீன் குழம்பு;
கருவாட்டுக்குழம்பு
சமைத்துவிட்டால்?
கேட்கவே வேண்டாம்...

வீட்டின் அருகில்
கேணி ஒன்று இருப்பதால்...
பேயாக இருக்கலாம்!
என்றனர் சிலர்...

என்னவாக இருந்தாலென்ன?
போதையில் இருப்பவனை
பேயென்ன செய்துவிடும்?
என்று நானும் விட்டுவிட்டேன்...

ஆனாலும் மனதுக்குள்
ஒரு தேடல்...
என்னவாக
இருக்குமென்று...

ஒரு நாள்
தென்பட்டது...
கையும் களவுமாய்
பிடிபட்டது...
பேயுமல்ல; பூதமுமல்ல!

சுதந்திரமாய்
சுற்றித்திரியும் - ஒரு
சுட்டிப்பூனை...
ஓர் அழகான
குட்டிப் பூனையென்று...
 
பிறகு நாங்கள்
நண்பர்களானோம்...
நள்ளிரவில் வரும் நண்பன்
நண்பகலிலும் வர ஆரம்பித்தான்...

கடந்த இரண்டு நாட்களாக
நண்பனை காணவில்லை...
ஏனென்று தெரியவுமில்லை!!!

குடும்பத்தை காண
சென்றிருப்பானோ?
காதலியை பார்க்க
போயிருப்பானோ?
என்றெல்லாம் யோசித்தேன்...

நேற்று மாலை
என் வீட்டின் அருகிலுள்ள
முருங்கை மரத்தடியில்
இறந்து கிடந்தான்!
என் நண்பன்...

என்ன நேர்ந்தது?
யாரிதை செய்தது?
எதுவும் புரியவில்லை...

காலங்காலமாக
செய்தது தானே?
புதிதாய் என்ன
செய்துவிட போகிறேன்?
வழக்கம் போல
பணிகளை தொடர்ந்தேன்...

கல்லாகி போச்சு மனசு...
கருங்கல்லை விட மோசமாய்...
எதற்குமே கலங்குவதில்லை...
இதற்க்கு பெயர் தான் சுயநலமா?

No comments:

Post a Comment