Thursday 7 April 2011

தேர்தல்...


பச்சைத் தமிழனை
பிச்சைத் தமிழனாய்
கொச்சைப் படுத்திய
எச்சை கட்சிகள்...

மிச்சமுள்ள மனிதரையும்
விட்டுவைக்க மனமில்லாமல்
மூர்கத்தனமாய் தாக்குவதற்கே
மூள்கிறது - இங்கே தேர்தல் கனல்...

எத்தனை பேர் போயிருப்பார்கள்
தனது சொந்த தொகுதிக்கு?
என்னவெல்லாம் செய்திட்டார்கள்?
தன்னை நம்பிய பகுதிக்கு...

மனசாட்சியை இப்படி
மார்வாடியிடம் வைத்துவிட்டு;
மறந்துபோன தொகுதிகளை - இன்று
பறந்து வந்து பார்க்கிறார்கள்...

ஏருழுத மண்ணெல்லாம் - இன்று
ஏழடுக்கு மாளிகையாம்...
உழைத்தவன் பசித்திருக்க - இங்கே
ஊழலுக்கு விருதுகளாம்...

மறதியும் மறுவாழ்வும்
மறத்தமிழனின் மறுக்கமுடியா
தேவை என்றுணர்ந்து - இன்று
மிக்சியாம், கிரைண்டராம்!!!

கையூட்டு வாங்கிக்கொண்டால்
கரைபடியும் நம் கைகள்...
கரைவேட்டிக் காரர்களுக்கு
இதைவிட்டால் வழியில்லை...

நம்மையும் அவர்கள் செய்யும்
ஊழலில் சேர்த்துக்கொள்ள;
நயந்து சொல்வதுதான் - இந்த
நயவஞ்சக தேர்தல் அறிக்கை!!!

எலும்புத்துண்டை கொடுத்துவிட்டு
இரும்பைக்கொண்டு நாளை அடிப்பர்...
இருப்பதை காத்துக்கொள்ள
இனியாவது முயற்சி செய்வோம்!!!

விழிப்புடன் வாக்களிப்போம் - மக்களுக்கு
வழித்தடம் காட்டிடுவோம்!!!
வாக்களிப்போம்!!!
வாழ்வை மீட்ப்போம்!!!


No comments:

Post a Comment