Wednesday 20 April 2011

Revolution....


இனி கரைவேட்டிகள்
கண்ணில் பட வாய்ப்பில்லை...
கதர் சட்டைக்கும்
கலர் துண்டுக்கும் வேலையில்லை...

சுழல் விளக்குகளும்
சூறாவளி பிரசாரமுமாய்
புழுதி பறக்கும் சாலையெங்கும்  
புயலென பாய்ந்த ஆட்களெல்லாம்...

பூப்படைந்த
பெண்ணைப் போலே
புகுந்து கொள்வார்
வீட்டுக்குள்ளே...

பெரியோராய், தாய்மாராய்,
பெருங்குடி மக்களாய்!!!
தென்பட்ட மக்கள் - இனி
பரதேசிபோல் புலப்படுவர்...

தேர்தலில் வெற்றி, ஆட்சியில் பங்கு;
அமைச்சர் பதவி, அளவில்லா சொத்து;
அடுத்த ஐந்தாடும்
அரங்கேறப்போவது இவைகள்தான்...

யாரேனும் ஒருவன் உண்டா?
ஓட்டு போட்ட மக்களுக்கு
உண்மையாய் உழைத்திட?
நன்மையை செய்திட?

ஓட்டு போட்ட அனைவருக்கும்
ஒன்று மட்டும் நிச்சியம் உண்டு...
ஜாதி மத வேறுபாடின்றி 
அனைவருக்கும் பெரிய நாமம்...

புரட்சி வெடிக்காமல் - இங்கு
பூபாளம் பிறக்காது...
புறமுதுகு காட்டிநின்றால் - நாளை
வரலாறு புகழாது...

ஒதுங்கியே இருந்தது போதும்...
இருந்த இடத்திலேயே
பதுங்குவோம் புலியைப்போல!
பாய்ந்திடுவோம் ஓர்நாள்!!
புதியதோர் உலகம் செய்ய!!!



No comments:

Post a Comment