Thursday 17 February 2011

Lets the hell out of here...

விண்ணை முட்டுது
விலைவாசி உயர்வு...
கண்ணை கட்டுது
கயவர்களின் ஊழல்கள்...
கழுத்தை நெரிக்குது
கரைவேட்டி அரசியல்...
நெஞ்சை அடைக்குது
நீதிமன்ற தீர்ப்புகள்...
உயிரே போகுது - எங்கள்
உரிமையை பறிக்கையில்...
இரத்தம் கொதிக்குது - எங்கள்
இரத்த சொந்தம் தவிக்கையில்...
கட்டுமரமேருது மானம் - தமிழன்
சுட்ட பிணமாய் வருகையில்...
ஆற்றுனா துயர் கொண்டோம்...
ஆண்டவன் செயல் என்றோம்...
எகிப்தில் நடந்ததே 
இங்கு எப்போது?
கையாலாகாத கயவனாய்
ஆனேனே...
புலம்பி தீர்க்கும் - நடைப் 
பிணமாய் போனேனே...
கடவுளோ; இயற்கையோ?
அநியாயம் தலைவிரித்தாடும் பொது...
அமைதியாகத்தானே இருக்கிறது...
பிறகெதற்கு இவைகளெல்லாம்?
பொய் சொல்லக்கூடாது...
புறம் பேச கூடாது...
களவம் கூடாது...
கடவுளை மறக்க கூடாது...
என சொல்லி
ஏன் என்னை வளர்க்கவேண்டும்?
பொய்,
பித்தலாட்டம்,
ஊழல் நிறைந்த உலகத்தில்
பீ தின்னும்
நாயாய் நான் வாழ்வதற்க்கா?

- பத்மா சுவாமிநாதன்

No comments:

Post a Comment