Monday 21 February 2011

கிறுக்குப்பய கனவு...

எங்கள் நீண்டநாள் கனவை
போலவே...
எங்களுக்கு பிறந்தது
இரட்டை குழந்தை...
மகன் பெயர் ரிஷிகேஷ்
என் சாயலில் இருப்பான்...
மகள் பெயர் வசுமதி
என் மனைவியை போல...
எல்லா தகப்பனைப்
போலவும்!
எனக்கும் மகளையே பிடிக்கும்...
என்னைப் போல
இருப்பதினால் - என்
மனைவிக்கு மகனையே
பிடிக்கும்...
அவர்கள் அமைதியாய்
அமர்ந்திருந்தாலும்?
அவர்கள் பெயரைச்சொல்லி
நாங்கள் அடித்துக்கொள்வோம்...
நேற்றும் அப்படித்தான்...
ரிஷி வைத்திருந்த
பொம்மையை வசுமதி
பிடிங்கிக்கொண்டாள்...
அவ்வளவுதான்
வீடே ரெண்டு பட்டது...
அழவேண்டிய மகனோ
அமைதியாகத்தான் இருந்தான்...
அருகிலிரிந்த மனைவியோ
அடக்க முடியாத அழுகையோடு
அடியும் தந்தாள் - வசுமதிக்கு...
இரவு பத்து மணி...
இருவரையும் தூங்கவைத்து விட்டு - நான்
இருக்கும் கட்டிலுக்கு
வந்து சேர்ந்தாள் என் மனைவி...
ஏன் இத்தனை கோபம்?
என நான் கேட்க...
மடை திறந்த வெள்ளம்போல
கண்ணீரை கொட்டிக்கொண்டே
காரணத்தையும் சொன்னாள்.....................
வசுமதி வரவுக்குப்பின்
என்னை முழுவதுமாய்
மறந்துவிட்டாய்...
எப்போதுமே நீதான்
எனக்கு எல்லாமே என்றாயே...
மகளை பார்த்ததும் மாறிவிட்டாயே?
கொஞ்சலும்; கெஞ்சலும்...
உன் நெஞ்சின் கதகதப்பும்...
வேண்டி நான் நிற்கையில்!
அவளை மட்டுமே
அரவணைத்தால்?
கோபம் வராமல்
வேறென்ன வருமென்றாள்?
மாசற்ற அவளன்பில்
மனமுருகி நினைத்துக்கொண்டேன்...
அட கிறுக்குப் பயபுள்ள...
உன்னை மாதிரி
இருக்குறதால...
நீயும் இப்படித்தான்
இருதிருப்பியோன்னு...
அவளை ஆசையா தழுவுறேன்...
மூச்சுக்கு மூச்சு
முத்தமிடுறேன்...
இன்னைக்கு மட்டுமில்ல
என்னைக்குமே நீதான்
என் முதல் குழந்தைன்னு...
சொல்ல வேண்டிய வார்த்தைகள;
சொல்ல முடியாம...
ரெண்டு சொட்டு கண்ணீர
அவ கன்னத்துல உதிர்க்கும்போது...
டக்... டக்... டக்...
யாரோ கதவ தட்டுறாங்க...
கதவை திறக்கையில்
கேபிள் டிவி காரர்...
சார் நூறு ரூபா தரனும்...

- பத்மா சுவாமிநாதன்.

No comments:

Post a Comment