Tuesday 1 February 2011

அஸ்தமனம்...

கதை சொல்வதில்
தமிழனுக்கு நிகர்
தமிழனே...
காரணம்?
அவர்கள்
கதை சொல்லும் விதமே...
புராணம் என்றாலும்
வரலாறு என்றாலும்
கூடியிருக்கும் கூட்டத்தை
தன் கட்டுக்குள் வைத்திருப்பார்கள்...
அப்படி ஊரே
ஒன்றுகூடி ரசித்த
ஒரு கலைதான்...
வில்லுப்பாட்டு.
போர்களத்தில்
உயிரை பறிப்பதற்கு
பயன்படுத்திய வில்தான்
முதன்மை வாத்தியம்...
அடுத்தது உடுக்கை,
கடம் என புடைசூழ...
நாட்டுப்புற பாடல்களால்
சொல்லப்பட்ட
கதா காலட்சேபம்...
"தந்தனத்தோம் என்று சொல்லியே...
வில்லினில் பாட...
ஆமா...
வில்லினில் பாட...
வந்தருள்வாய் கணபதியே...."
இறைவனக்கதொடு
பாடல் தொடங்கும்...
இடையில் அவ்வபோது
ஒரு குரல் வரும்...
ஆமா, அப்படியா,
ம்ம்ம்ம் - இவையெல்லாம்
அவையோரின் பிரதிபளிப்பு
என்றே தோன்றும்....
பாட்டோடு கதை வரும்...
கதையின் நடுவே பாட்டு வரும்...
கதை சொல்பவரே
கதாநாயகன்...
வந்திருக்கும் அனைவருக்கும்
வணக்கம் சொல்லி
வரவேர்ப்பார்...
கதை சொல்லி
முடிக்கும் வரை
அணுவும் அசையாது...
எப்போதோ பார்த்த
ஞாபகம்...
இப்போதும் பசுமையாய்...
எப்போதாவது நிகழ்சிக்கு
தொலைகாட்சிகள்
இவர்களை அழைப்பார்கள்...
இப்போது அதுவும்
முடிவுக்கு வந்தது...
விடுமறை நாளென்றால் போதும்
வந்துவிடும் ஒரு குரல்...
"இந்திய தொலைக்காட்சியில் முதன் முறையாக...
திரைக்கு வந்து சில மாதங்களே ஆன...
புத்தம் புதிய திரைப்படம்...
காணத்தவறாதீர்கள்..."

அவ்வளவுதான் பிறகெப்படி
இக்கலை வளரும்...
மேடை நாடகங்கள்,
பொம்மலாட்டம் போல்
குறைந்து வரும் கலைகளில்
வில்லுப்பாட்டும் ஒன்று...
தமிழ் பண்பாடு,
கலாச்சாரங்களைக் காப்போர்
இதையும் கண்டுகொண்டால்...
மகிழ்ச்சி....

-பத்மா சுவாமிநாதன்

No comments:

Post a Comment